கிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்
கோவணம் கூட இன்றி அந்தரத்தில் உயிர்விட்டார் இயேசு, அவர் 4 காசு சம்பாதித்ததாக செய்தி இல்லை
அவரின் சீடர்கள் சொந்தமாக தொழில் செய்துகொண்டே சபையினை கால்நடையாக நடந்து வளர்த்தனர், நல்ல உடை கூட இல்லை
அடிபட்டு உயிர்விட்டு அவர்கள் வளர்த்தது கிறிஸ்தவம்
இங்கே ஏதோ வெள்ளைக்காரன் பரம்பரை போல கோர்ட் சூட் போட்டுகொண்டு , பெரும் பணக்காரர் போல பல்கலைகழகம் நடத்திகொண்டு இருக்கும் இவர்கள் கிறிஸ்தவ போதகர்களாம்
நம்பிகொள்ளுங்கள்
அதிலும் டி.ஜி.எஸ் தினகரன் இறந்த அன்று அவரை அடக்கம் செய்ய பணமில்லை என அழுத இவரின் மாபெரும் மோசடியினை மறக்க முடியுமா?
அப்பொழுதெல்லாம் வந்து இவர் முதுகில் மிதிக்காத இயேசு, இவர் பணம் சேர்க்கும்பொழுதும் பல்கலைகழகம் நடத்தும்பொழுதும் வராத இயேசு
மோடி பிரதமர் ஆவார் என சொல்ல மட்டும் ஓடோடி வந்தாராம்
எத்தனையோ நோய்களை குணமாக்கிய இயேசு, சில சீடர்கள் அதை காணிக்கை வாங்கி செய்யலாமே என சொன்னபொழுது சொன்னார்
“இலவசமாக பெற்றீர்கள், இலவசமாகவே கொடுங்கள்”
அதெல்லாம் மறந்து முழுக்க பணம் குவிப்பதிலே இறங்கி, ஏதோ கார்பரேட் கம்பெனி ஓணர் போல கோட் சூட் போடும் இவரா கிறிஸ்தவ போதகர்?
எங்கிருந்தோ வந்து இந்திய தொழுநோயாளிகள் புண்களை துடைத்த தெரசா, தன் சொந்த சொத்துக்களை விற்று முல்லைபெரியாறு அணைகட்டிய பென்னிகுயிக், வேலூர் மக்களுக்காக வாழ்ந்த ஐடா ஸ்கேடர், நெல்லை பெண்களுக்காக தன் வாழ்வினை கொடுத்த டக்கர அம்மாள் போன்ற கிறிஸ்தவர் வரிசை இருக்க..
கிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் இந்த தினகரன் குடும்பம்
இது ஒரு கிறிஸ்தவ ஆர்.எஸ்.எஸ். அதனால் ஒரு டிங்கி ஒரு சங்கிக்கு ஆதவு தெரிவிப்பதில் ஆச்சரியமே இல்லை
(ஒரு சாதாரண வங்கி அதிகாரி எப்படி அரசியலுக்கும் வராமல் நிகர்நிலை பல்கலை கழகம் தொடங்க முடிந்தது என்றால் , அதுதான் கிறிஸ்தவ மோசடி)