அண்ணே தமிழ்நாட்டு அரசியல் எங்கே போகுது?

அண்ணே தமிழ்நாட்டு அரசியல் எங்கே போகுது?

1960களில் இருந்து இந்திய தேசியத்தில் இருந்து விலகி ஒருமாதிரி சென்ற தமிழகம் இப்பொழுது தேசியத்திற்கு திரும்ப முடியாமலும் அதே நேரம் சரியான திராவிட தலமை இல்லாததாலும் மகா குழப்பத்தில் இருக்கின்றது

அதனால் தேசிய பாதையில் இணையவும் முடியவில்லை, திராவிட தலைவர்களும் சரியில்லை, திராவிட வழியும் தெரியவில்லை தனிநாடு கோரவும் முடியாது

இப்படி ஏக சிக்கலில் என்ன செய்வதென்றே தெரியாமல் மகா குழப்பத்தில் நிற்கின்றது


வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ-சீமானை கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா

அய்யா முதலில் எஸ்.வீ சேகரை கண்டுபிடிக்க வேண்டும், அதை ஏன் மறைக்கின்றீர்கள்??


Image may contain: 1 person, textமேற்கு தொடர்ச்சி மலையினை இடிக்க வேண்டும், பூமி தட்டையானது இல்லாவிட்டால் கடல் எப்படி கொட்டாமல் இருக்கும் இது போன்ற அரிய தத்துவங்களை தும்பிகள் சொல்ல தொடங்கியாயிற்று

அவர் ஏதோ முப்பாட்டன், தமிழ் உணவு, ஆடுமாடு மேய்ப்பது அரசு வேலை, 5 தலைநகரம் அது இது என அள்ளிவிட்டால் தும்பிகள் எங்கோ பாய்கின்றன‌

பின் அங்கிள் சைமன் என்ன செய்வார்?

வைகோ வாழ்க, ரஜினி பரவாயில்லை என தலை தெறிக்க ஓடமாட்டாரா?

அதனைத்தான் செய்கின்றார் சைமன்…

(விகடன் இப்பொழுதெல்லாம் பைத்தியங்களை பேட்டி எடுத்து ஒரு மாதிரியான கலாய்ப்பில் இறங்கிவிட்டது, நுட்பமாக சீண்டி விளையாடுகின்றார்கள்

காலா விவகாரத்தில் கூட கிரேட் ரஞ்சித் என கலாய்த்திருக்கின்றது, அது புரியாமல் எம்மிடம் ஏய்ய்ய் விகடன் சொன்னதை பார் என பலர் வம்புக்கு வருகின்றார்கள்)

 

அண்ணே சைமனை கவனிதீர்களா, ரஜினியினை ஆதரிப்பது போல பேசியிருக்கின்றார்

இதிலென்ன ஆச்சரியம்?, இன்னும் கொஞ்சநாளில் பிரபாகரன் பெரும் கொலையாளி, அவரின் தம்பி என சொன்னதற்கு நான் வெட்கபடுகின்றேன், அவர் எனக்கு ஓனான் கறி கூட தரவில்லை என சொல்லி கடும அதிர்ச்சி கொடுப்பார் பாருங்கள்

மரக்கிளையின் நுனிக்கு செல்லும் குரங்கு அடுத்துஎங்காவது தாவத்தான் செய்யும், அதன் இயல்பு அது

அடுத்த தாவல் கோபாலபுரத்து வீட்டு மொட்டைமாடியாக இருக்கலாம்


திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க ரஜினி பயன்பட வேண்டும் : தமிழருவிமணியன்

அதெல்லாம் இருக்கட்டும் மணிசார், காலாவில் ரஜினியினை சுற்றிவரும் நாயின் பெயர் மணி, அது உங்களை குறிக்கும் குறீயீடு என பல செய்திகள் வருகின்றன‌

அதுபற்றி ஏதும் கருத்து உண்டா?


 

வந்த பறவைகள் எல்லாம் திரும்பி சென்றுவிட்டன போதிய நீர் இல்லை ,வேடந்தாங்கல் சரணாலயம் மூடப்பட்டது : செய்தி

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள்தான் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றன என்றால், பறவைகளும் செல்ல தொடங்கியாயிற்று

ஒருவேளை அந்த பறவைகளுக்கும் நம்மையும் சுட்டு கொன்றுவிடுவார்கள் எனும் அச்சமோ என்னமோ?

இன்னும் எதெல்லாம் கிளம்புமோ தெரியவில்லை