பழனிச்சாமி அரசு குறிவைத்திருப்பது ஜெயா டிவியினை

பழனிச்சாமி அரசு குறிவைத்திருப்பது ஜெயா டிவியினை . அதுதான் புல்டோசர் கணக்கில் பழனிச்சாமி அரசு மீது மண் வாரி தூற்றுகின்றது

அதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் புதியதலைமுறை டிவியினை மிரட்டுகின்றார்கள். இங்கு அடித்தால் அங்கு அடங்கும் என்ற கணக்காக இருக்கலாம்

நிச்சயம் இம்மாதிரி நடவடிக்கைகள் பிரபாகரனுக்கு ஆதரவாக தந்தி டிவியில் சைமன் பேசும் பொழுதும் இன்னும் பல டிவிக்கள் அப்பட்ட தேசவிரோத நிகழ்ச்சி நடத்தும்பொழுதும் செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை

காரணம் ஜெயாவிற்கு அரசியல் கணக்கு இருந்தது, இன்னும் பலருக்கு இருந்தது

கொஞ்சமும் வருங்கால அரசியல் கணக்கே இல்லாத அரசு பழனிச்சாமியுடையது, அடுத்து நிச்சயம் வாய்ப்பே இல்லை நமக்கு ஏது வோட்டு வங்கி? நமக்கு ஏது எதிர்காலம் என மனம் போன போக்கில் இருக்கும் அரசு இது

அதனால் பல நடவடிக்கைக்கைகளை அது யாருக்காகவோ எடுக்கின்றது, அசால்ட்டாக எடுக்கின்றது

சுட வேண்டுமா சுடு? வழக்கு போட வேண்டுமா போடு, யாரையும் ஓட வைக்க வேண்டுமா வை, என்ன வந்துவிடும்? இல்லை இனி நமக்கு என்னதான் ஆபத்து ? என்ன வாக்கு எதிர்காலம்? ஒன்றுமே இல்லை என ஒருவித முக்தி நிலையில் இருக்கும் அரசு இது

விரைவில் பாருங்கள், காமராஜர் முதல் ஜெயா வரை பலர் எடுக்க தயங்கிய பெரும் முடிவுகளை பழனிச்சாமி அரசு அசால்ட்டாக எடுக்கும், அதிரடியாக எடுக்கும்

எந்த விளைவுகள் அவர்களை பாதிக்கும்? என்ன ஆகிவிடும்? ஒன்றும் ஆகாது

அதனால் வரலாறு காணாத இரும்பு முதல்வர் என்ற பட்டமும் பழனிச்சாமிக்கு கிடைக்கும், அவர் விதி அப்படி இருந்திருகின்றது