திறமையான ஒருவனை அரசு கண்டெடுத்து பக்கத்தில் வைத்தால் அது சட்ட விரோதம்

எட்டுவழி சாலையில் இவ்வளவு தீர்மானம் காட்டும் பழனிச்சாமி, அந்த சேது சமுத்திர திட்டத்திலும் வேகம் காட்டினால் என்ன?

சாலைகள் நாட்டிற்கு மகா அவசியம், ஆனால் இப்பொழுது சேலத்திற்கு தரமான‌ சாலைகள் இருக்கின்றன, அவற்றையே விரிவுபடுத்தினால் போதுமானது என்கின்றார்கள்

அதைவிடுத்து விளைநிலம் வழியே 8 வழிச்சாலை போட்டே தீருவேன் என்றால் என்ன அர்த்தமோ தெரியவில்லை

இவ்வளவிற்கும் சேலம் பக்கம் துறைமுகம் போன்ற விஷயங்களுமில்லை, பின்னர் ஏன் அடம்?


மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு, தனியார் நிறுவனங்கள் மற்றும் கன்சல்டன்சி நிறுவனங்களில் இருந்து தேர்வு செய்யும் அரசியல் சட்ட விரோத அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் : ஸ்டாலின்.

அமெரிக்க பல்கலை கழகங்களில் தமிழனுக்கு இடம் என்றால் பெருமை, இன்னும் பல உலகநாடுகளில் இந்தியனுக்கு வரவேற்பு என்றால் மகிழ்ச்சி

பிரிட்டன் பொருளாதாரத்தை நிறுத்தும் லண்டன் வங்கிங்கு தமிழன் ரகுராம் ராஜன் நியமிக்கபட ஆலோசனை என்றால் அது மாபெரும் வெற்றி

அமெரிக்க அரசின் மறைமுக கட்டுபாட்டில் இயங்கும் பல நிறுவணங்களில் இந்தியர் பங்குபெற்றால் அது மாபெரும் சமூக நீதி

ஆனால் இந்தியாவில் திறமையான ஒருவனை அரசு கண்டெடுத்து பக்கத்தில் வைத்தால் அது சட்ட விரோதம்


எந்த ஆட்சியிலும், ஏன்? மன்னர் ஆட்சியிலும் இல்லா கொடுமை தமிழகத்தில் இப்பொழுது நடக்கின்றது : பாரதிராஜா வருத்தம் 

இவர்தான் தமிழகத்தை தமிழன் ஆண்டால் எல்லாம் சரியாகும் என சொன்னவர், இப்பொழுது பச்சை தமிழன் ஆட்சியில் பெரும் கொடுமை என அழுபவரும் இவர்தான்

ஆக இனி தமிழகத்தை வந்தேறிகள் ஆண்டால்தான் சரி, அப்படித்தானே மிஸ்டர் பாரதிராஜா?