குலகல்வின்னா என்னடா?
அண்ணே திமுக இல்லண்ணா ராஜாஜி குலகல்வின்னு கொண்டுவந்து நம்ம எல்லாரையும் அழிச்சிருப்பார்னே
குலகல்வின்னா என்னடா?
கொஞ்சநேரம் படிக்கிறது, அப்புறம் அப்பன் தொழிலை மகன் கத்துகிறது.இது சமூக அநீதின்னே
எப்படி??
அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல, அது தொடர்ந்திருந்தா இந்நேரம் விவசாயி புள்ள விவசாயியா இருக்கும், சலவை தொழிலாளி புள்ள துணிவெளுக்கும், திமுகதான் இதனை மாற்றிற்று
ஒஹோ, குலகல்வின்னா இதுதானா?,
ஆமாண்ணே அது கொடுமையான விஷயம்
அதாவது அப்படி இருந்தா அப்பன் வேலையே மகன் செய்வான் அது சமூக ஆபத்து அப்படித்தானே?
பின்ன, அடுத்தவங்களுக்கு எப்படின்னே வாய்ப்பு கிடைக்கும், ராஜாஜி விஷம்ணே
சரி கலைஞருக்கு பின் அவர் மகன் திமுக தலைவரா வந்துட்டார், அடுத்தால பேரன் வந்துருவார்னு சொல்றாங்க, இதெல்லாம் எப்படி? குலவாரிசு கட்சிக்கு மட்டும் சரியா?
அண்ணே நீங்க பிராமண பயலுககிட்ட ஏமாந்துட்டீங்க, உங்கள நல்லா ஏமாத்திட்டானுக, பார்ப்பான் சகவாசம் வேண்டாம்னு சொல்றது இதுக்குத்தான்
சொல்லிட்டு போடா, பெரியாருக்கு பின்னால அவர் சொத்துக்கு வீரமணி வந்ததெல்லாம் என்ன வகைடா?
நீங்க சமூக நீதிக்கு ஆபத்தான ஆளுண்ணே, உங்ககிட்ட எல்லாம் பேசவே கூடாது”