பேரரிவாளன் உட்பட 7 பேருக்கும் விடுதலை இல்லை

பேரரிவாளன் உட்பட 7 பேருக்கும் விடுதலை இல்லை என இந்திய உச்சபீடம் அறிவித்துவிட்டது

சிலர் கத்துகின்றார்கள், அற்புதம்மாள் மிக உருக்கமாக கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றார்

இந்தியாவின் உச்ச பீடம் எதிர்ப்பார்ப்பது இவர்களிடமிருந்து ஒரு வார்த்தை , ஒரே ஒரு வார்த்தைதான்

புலிகள்தான் கொன்றார்கள், சிவராசன் எனும் புலி எங்களை ஏமாற்றிவிட்டான் என்ற ஒரு வார்த்தையினைத்தான்

ஆனால் அதை இவர்களால் சொல்லமுடியாது, காரணம் சொல்லிவிட்டால் பல விஷயங்களை கிளறவேண்டி வரும்

எது என்றால் திராவிட கழகம் உட்பட பல இயக்கங்களுக்கு புலிகளோடு இருந்த தொடர்பு வரை சொல்ல வேண்டி வரும்

இந்தியாவின் அதிகார உச்சம் இன்றுவரை எதிர்ப்பார்ப்பது அதுதான், இவர்கள் அதனை சொல்லாமல் சும்மா நாங்கள் நிரபராதிகள் என புலம்பிகொண்டிருக்கும் ரகசியமும் இதுதான்

திமுகவும்,திகவும் புலிகளுக்கு செய்த உதவிகள் கொஞ்சமல்ல, ராஜிவ் கொலை அந்த தைரியத்தில்தான் நடந்தது

நிச்சயமாக உள்ளதை உள்ளபடி சொல்லாமல் இவர்கள் இப்படி மனுமேல் மனுபோட்டு கொண்டு நாங்கள் நிரபராதி என சொல்லிகொண்டிருந்தால் ஆகபோவது ஒன்றுமில்லை

 

 


வாஜ்பாய் ஈழதமிழருக்கு செய்த உதவியினை நாங்கள் மறக்க மாட்டோம் : வைகோ

வைகோ எப்படிபட்ட குள்ளநரி என்பது இதிலே விளங்கும்

வாஜ்பாய் சும்மா வரவில்லை, 1986ல் டெசோவில் அவரை இணையசெய்து ஈழதமிழருக்கு ஆதரவாக பேச வைத்தவர் கலைஞர்

கலைஞரின் டெசோவே ஈழதமிழருக்கு ஆதரவாக அகில இந்திய அளவில் செயல்பட்டு பின் அமிர்தலிங்கம் கொலைக்கு பின் கலைக்கபட்டது

வாஜ்பாயினை புகழும் வைகோ மிக தந்திரமாக கலைஞரை மறைக்கின்றார் அல்லவா? இதுதான் அரசியல்தந்திரம்

வைகோ எப்படிபட்ட ஓநாய் என்பதை இனியாவது திமுகவினர் புரிந்துகொள்ளட்டும்