ராஜிவ் கொலையில் முக்கிய குற்றவாளி இத்தாலியில்…..
ராஜிவ் கொலையில் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருப்பதாக சுப்பிரமணிய சாமி புது குண்டை தூக்கி வீசிவிட்டார்
அந்த போபர்ஸ் குவாட்ரோச்சி இருந்தாலும் அவரை கைகாட்டாலம் அவரும் செத்துவிட்டார், பின் யாரை சு.சாமி சுட்டி காட்டுகின்றார் என ஆளாளுக்கு மண்டையினை பிய்த்துகொண்டிருக்கின்றார்கள்
முதலில் இந்த சு.சாமியினை பிடித்து விசாரித்தாலே பாதி சிக்கல் தீரும்
இவர் அமைச்சராக இருந்தபொழுதுதான் ராஜிவிற்கான கருப்பு பூனை படை பாதுகாப்பு விலக்கபட்டது, அதன் பின்புதான் தனுவால் ராஜிவினை நெருங்க முடிந்தது
கருப்புபூனை படை பாதுகாப்பு நீடித்திருந்தால் ராஜிவ் கொலை தடுக்கபட்டிருக்கலாம், இப்பொழுது ராஜபக்சேவினை எல்லாம் புலிகள் … பிடுங்கினார்களா?
இல்லை மாபாதகன் ஜெயவர்த்தனே உச்சி மயிரை பிடுங்கினார்களா?
பாதுகாப்பு பலவீனமான பாய்வது புலிகள் பாணி. பாதுகாப்பு பலமான இடங்களில் பாயவே மாட்டார்கள் அவர்கள் பலம் அவ்வளவுதான்
ராஜிவின் கருப்பு பூனை பாதுகாப்பினை விலக்கிய சு.சாமிதான் முதல் குற்றவாளி, வேறு எல்லோரும் அவருக்கு பின்னால்தான்