அந்த ரகசியம் யாருக்கு தெரியும்? யாரை பிரபாகரன் முழுக்க நம்பி இருப்பார் ?
புலிகள் காலத்தில் தங்கம் அவர்களிடம் குவிந்திருந்தது, மக்களிடம் வங்கி நடத்தி வசூலித்தது முதல் கிழக்கே காத்தன்குடி மக்களிடம் பிடுங்கியது, கடத்தலில் குவித்தது என ஏராளமான தங்கம் அவர்களிடம் இருந்தது
இறுதி யுத்தத்தில் தோல்வி முகம் தெரிய அவர்கள் காடுகளில் ஆங்காங்கு அதனை புதைத்து வைத்தனர்
முன்பு அமைதிபடை காலத்தில் இப்படி ஆயுதங்களை புதைத்து பின்னர் எடுத்த அனுபவம் அவர்களுக்கு ஏராளம் உண்டு என்பதால் அவர்களுக்கு சாதாரணம்
ஆனால் மீள வர முடியாதவாறு அவர்கள் அழிக்கபட்டதால் அந்த தங்கத்தின் மர்மம் தெரியாமல் போயிற்று
முன்பு சந்தண வீரப்பனும் இப்படி பணம் புதைத்த கதைகள் உண்டு, ராஜ்குமார் கடத்தல் போன்றவைகளில் கிடைத்த பணம் அது
ஆனால் பணமதிப்பு நடவடிக்கைக்கு பின் இனி அது கிடைத்தாலும் உபயோகமில்லை என அதை தேடும் பணி தற்பொழுது நடக்கவில்லை, முன்பு தேடினார்கள்
ஈழத்தில் புதைக்கபட்டிருப்பது தங்கம் என்பதால் ஆளாளுக்கு தேடுகின்றார்கள், சிங்கள ராணுவம் காவல் துறை மற்றும் தமிழர் என ஆளாளுக்கு தேடியும் முழுவதும் கிடைக்கவில்லை
முன்பு பொன்சேகா ஓரளவு மீட்டதோடு சரி, இன்னும் தேடிகொண்டே இருக்கின்றார்கள்
அந்த ரகசியம் யாருக்கு தெரியும்? யாரை பிரபாகரன் முழுக்க நம்பி இருப்பார்
சாட்சாத் அங்கிள் சைமனைத்தான் என்பதில் சந்தேகமில்லை
அங்கிளின் அரிசி கப்பல் கடத்தல் கதையினை ஆளாளுக்கு கலாய்க்கின்றார்கள், உண்மையில் அன்னார் சொல்லவந்தது என்ன தெரியுமா?
அரிசி கடத்தல் போல தங்கம் புதைத்த இடமும் எனக்கு தெரியும் , நானும் அண்ணனும்தான் புதைத்தோம் என உலகிற்கு சொல்ல வருகின்றார்
அது புரியாமல் அவரை கலாய்க்கின்றார்கள்
விரைவில் சிங்கள அரசே அந்த தங்கத்தை மீட்க அங்கிளை தேடும் அல்லவா? அப்பொழுது அங்கிளின் அருமை எல்லோருக்கும் புரியும்