நகரங்கள் பெயர் மாற்றம்….

இந்த பழனிச்சாமி அரசு விமர்சனங்களை தாண்டி பல விஷயங்களை செய்ய தொடங்கிவிட்டது

அதாகபட்டது வெள்ளையன் தன் வாயில் நுழையாத தமிழக நகரங்களுக்கு அவனுக்கு வாயில் வந்த பெயரினை வைத்துவிட்டான்

அப்படித்தான் தூத்துகுரின், டிரிச்சி, தஞ்சூர், டின்னவேலி என பல பெயர்கள் மாறி அவை நிலைத்தும் விட்டன‌

இதுவரை எந்த அரசும் அதுபற்றி யோசிக்கவில்லை, கலைஞர் அரசும் மெட்ராசை சென்னை ஆக்கியதோடு சரி

இப்பொழுது இனி தூத்துகுடி, தஞ்சாவூர் என பெயர்கள் மாற்றபடும் என பழனிச்சாமி அரசு தெரிவித்துள்ளது

சும்மா சொல்ல கூடாது, ஆட்சி முடிவதற்குள் கலைஞருக்கும் ஜெயாவிற்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்துவது போல, அட அவர்கள் செய்யாதை இவர்கள் செய்துவிட்டார்களே என்ற அதிர்ச்சி கொடுக்க‌ பழனிச்சாமி கூட்டம் ஒரு முடிவோடு இருக்கின்றது

ஏதோ ஒரு சக்தி இவர்களை திட்டமிட்டு இயக்குகின்றது, எந்த தடை என்றாலும் தாண்டுகின்றார்கள், எந்த சிக்கல் என்றாலும் அடித்து நொறுக்கி ஆட்சியினை அட்டகாசமாக கொண்டு செல்கின்றார்கள்

இன்னும் என்னென்ன அதிரடிகளை எல்லாம் எடுத்து வரலாற்றில் நிற்க போகின்றார்களோ தெரியவில்லை

ஆனால் நிற்பார்கள் போல‌

கிரிக்கெட்டில் எப்பொழுதும் டெயில் என்டர்கள் எனப்படும் கடைசி பேட்ஸ்மேன்களுக்கு அச்சமே இருக்காது. காரணம் தோற்றால் அவர்களுக்கு சிக்கலே இல்லை ஆனால் வென்றுவிட்டால் வரலாறு

அட்டகாசமான ஆல்ரவுண்டர்கள் இப்படித்தான் கிரிக்கெட்டில் உருவானார்கள்

பழனிச்சாமி அரசும் அப்படி வருவது வரட்டும் என அடித்து ஆட ஆரம்பித்தாயிற்று, விக்கெட் இப்போது விழுவதாக தெரியவில்லை என்பதால் அவர்கள் காட்டில் இப்பொழுது ரன் மழை