பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தவர் மோடி : சிவசேனா
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தவர் மோடி – சிவசேனா குற்றச்சாட்டு
சிவசேனா பாஜகவின் நெருங்கிய கூட்டாளி, அது அப்ரூபர் ஆவதால் மோடி பொய் பரப்பினார் என்பது நிச்சயம் உண்மையாக இருக்க கூடும்
சிவசேனைக்கே மோடி வெறுத்துவிட்டார் என்றால் அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை
இதுபற்றி தமிழிசை இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை, சிவசேனைக்கு பதிலடியாக கடந்தமுறை பொய் சொல்லி ஆட்சியினை நாங்கள் பிடித்திருக்கலாம் ஆனால் இம்முறை உண்மையினை சொல்லி ஆட்சியினை பிடித்து காட்டுவோம் என அம்மணி சொல்லாதவரை மோடிக்கு நல்லது
ஒரு வழியாக காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வந்தாயிற்று
இனி ராணுவத்தின் கரங்கள் சுதந்திரமாக செயல்பட வாய்ப்புகள் அதிகம்,
காஷ்மீர் தீவிரவாதம் தன் அந்திம காலங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்
இறுதிவரை அவரை போலிசாரால் பிடிக்க முடியவில்லை எனும் சாகசகாரராகிவிட்டார் சேகர்