நான் ஜெயலலிதா கொள்ளை அடித்ததாக சொல்லவில்லை : திண்டுக்கல் சீனிவாசன்

Image may contain: outdoor and text

சரிதான், இனி காமராஜருக்கு பின் பொற்கால ஆட்சி கொடுத்தது பழனிச்சாமி என வரலாறு எழுதிவிடும் போல..

எதிரிகள் சுதாரிக்க வாய்ப்பே இல்லாமல் அடிப்பது என்பது இதுதான், போட்டு அடிக்கின்றார்கள்

எதிரிகளுக்கு வாய்ப்பு இல்லை என்பதை விட, இப்போதைக்கு எதிரிகளே இல்லை என்பதுதான் பழனிச்சாமியின் நல்ல நேரம்


நான் ஜெயலலிதா கொள்ளை அடித்ததாக சொல்லவில்லை, அவர் ஆட்சியில் சசிகலா கொள்ளையடித்தார் தினகரன் அந்த பணத்தை வைத்துத்தான் 18 எம்.எல்.ஏக்களை வாங்கினார் என பொருள்பட பேசினேன் : திண்டுக்கல் சீனிவாசன்

தோட்டத்துகாரனை பற்றி நான் பேசவே இல்லை ஆனால் அவன் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதை அவன் வீட்டிலே பதுக்கிய அயோக்கியர்களை பற்றித்தான் நான் பேசுகின்றேன் என்கின்றாராம் அமைச்சர்

நம்பிகொள்ளுவோம், ஆனால் தன் வீட்டிலே கள்ளசாராயம் காய்ச்சும் அளவு அந்த தோட்டத்துகாரர் என்ன செய்துகொண்டிருந்தார் மிஸ்டர் அமைச்சர்???


நடிகை ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல்

பின்னே, முன்பு மிக மிக கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்துவிட்டு, கொஞ்ச நாளாக முழுக்க போர்த்திகொண்டு நடித்தால் எந்த ரசிகனுக்கு கோபம் வராது??