அறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்
என்னமோ சொன்னீங்களே, தமிழ்நாட்டை தமிழன் ஆண்டா சரியாயிரும்னு, இப்போ பழனிச்சாமி தமிழந்தான் ஒரு வார்த்தை பேசமுடியுதா? ஓட அடிக்கிறாங்க
ஆமாங்கையா, இத நான் எதிர்பார்க்கல அறியாமையால் தவறு செய்துட்டேன்
நமக்கெல்லாம் கலைஞர்தான்யா சரி, எவ்வளவு பேசினோம் மனுஷன் கொஞ்சமாவது கண்டுகிட்டாரா? சந்தடி சாக்கில நீ ஆமைகறின்னு அள்ளிவிட்டதுல கூட அவரு சிரிக்கலியே..
ஆமாங்கய்யா இப்போதான் அவர் அருமை புரியுது, என்ன செய்யலாம்?
உனக்கு சொல்லியா தரணும்? “நாம் தமிழர்” ஆதித்தனனாரே தன் கட்சியினை திமுகவில் சேர்த்தது மாதிரி நீனும் உன் கட்சிய கொண்டு திமுகவில் சேத்துரு
அது எப்படிங்கய்யா….
இங்கபாரு நீனும் நானும் கலைஞரை திட்டுனது கொஞ்சமில்லை, ஆனா இனி நாம வெளியில இருந்தாலும் ஆபத்து எப்போ பிடிச்சு உள்ள போடுவானுகளோ தெரியாது, ஈழத்திற்கு ஓடலாம்னா பிரபாகரனையும் காணோம்
அப்படின்னா அந்த ஆதித்தனாருக்கு கொடுத்தமாதிரி திமுக ஆட்சியில எனக்கு சபாநாயகர் பதவி கொடுப்பாங்களா? தம்பிகள சமாளிக்க வசதியா இருக்கும்
ரொம்ப பேசிட்டோம்ல அதனால அறிவாலயம் வாசல்ல செருப்பு காவல்காக்குற பதவிதான் நமக்கு கிடைக்கும், வலது கால் செருப்புக்கு நீ, இடதுகால் செருப்புக்கு நான்.