அஞ்சாமல் திமுக தொடர்ந்து போராடும் : ஸ்டாலின்
ஏம்பா மகனே, இந்த 8 வழிச்சாலைக்கு அடித்தளமிட்டது கருணாநிதி, கையெழுத்திட்டது ஸ்டாலின் 4 லட்சம் விவசாயிகளை நடுவீதியில் நிறுத்தியது “விவசாய துரோக” திமுக ஆட்சின்னு ஒரு பயலும் கிளம்பலியா? ஆச்சரியமா இருக்கு
அவனுகளுக்கும் சொல்றதுக்கு ஆசைதான், ஆனா ஏற்கனவே அவனுக சொன்ன பொய் எல்லாம் கிழிஞ்சி அவனவன் தலை தெறிக்க ஓடும்பொழுது இப்படி பொய் சொல்ல முடியுமா?
மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் ஆய்வு செய்தால் பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் திமுக தொடர்ந்து போராடும் : ஸ்டாலின்
“யோவ் ஸ்டாலின் மனுஷன்யா, தெய்வம்யா நமக்காக என்னா பாடு படுறாய் பார்த்தியாய்யா?, இந்த ஆள போய் சட்டைய கிழிச்சி அனுப்பிட்டோமே
மாநில அரசின் உரிமையினை காப்போம்னு திமுக நமக்கு ஆதரவா நாம சொல்லாமலே வந்து நிக்குதுபார்த்தியா, இதுதான்யா பெருந்தன்மை, நேர்மை எல்லாம்.
நாம செய்ய வேண்டிய போராட்டத்தை நமக்காக அவர் செய்றார்யா, ஒரு நாள் கூவத்தூர்க்கு தூக்கிட்டு போய் ரகசியமா மாலை போட்டு கொண்டாடனும்யா”
விமான நிலையங்கள் தேவையா? – சீமான் சீற்றம்
பிரபாகரன் எதற்கு விமானபடை கட்டினார்? என கேட்டால் சைமனிடம் பதில் இருக்காது
(அங்கிள் சைமன் கொழும்பு, கனடா, ஐரோப்பா எல்லாம் எப்படி சென்றார் என்றால் நீந்தியே சென்றார் என தும்பிகள் சிரிக்காமல் சொல்வார்கள்)
இந்த தும்பிகள் அடிக்கடி வந்து எங்கள் அண்ணன் சீமானை கலாய்க்கின்றாய், எங்கே ஆதாரம் காட்டு என வம்புசெய்கின்றன
இவர் கொழும்பு வழியாக ஈழம் சென்ற கதை, சிங்களன் குறுகுறுவென உற்று பார்த்த கதை, பிரபாகரன் இவருக்கு ஆமை கறி கொடுத்த கதை
இவரும் பிரபாகரனும் துப்பாக்கி மெக்கானிசம் படித்தபொழுது சிங்களன் சுட்ட கதை, விமானம் இவர் மேல் குண்டு வீசிய கதை, அந்த விமானத்தை இவரும் கடாபி என்பவரும் சுட்டு வீழ்த்திய கதை
அப்படி ஏகபட்ட கதைகளை உங்கள் அண்ணன் அள்ளிவிடுகின்றான் அல்லவா?
அந்த சம்பவங்களுக்கு எல்லாம் ஆதாரத்தை கொடுத்துவிட்டு பேசுங்கள்
குறிப்பாக போராட்டத்தை சைமனிடம் பிரபாகரன் ஒப்படைத்து நீ என் தம்பி என சொல்லி கையொப்பமிட்ட பேப்பர், ஆடியோ, வீடியோ ஆதாரம் எல்லாம் கொடுத்தே தீரவேண்டும்
இந்தி எதிர்ப்பு முதல் மிசா காலம் வரை திமுக நிரப்பாத சிறைகள் இல்லை, இந்த மிரட்டல்கள் எல்லாம் அந்த ஆலமரத்தை அசைக்க முடியாது
புதிதாக வந்த கவர்னருக்கு, அதுவும் மிஞ்சிபோனால் இன்னும் இரு ஆண்டுகள் இங்கு இருக்கபோகும் கவர்னருக்கு இந்த திமுக பற்றி என்ன தெரியும்?
ஆளுநர் என்ன தமிழகத்து நிரந்தர சக்கரவர்த்தியா? நடக்குமா?
ஏதோ இளைப்பாற வந்த பறவை தன் அலகால் அந்த மரத்தை வீழ்த்துவேன் என கிளம்பினால் அது நகைப்புகுரியது