உலகம் சுற்றிய களைப்பு தலைவியின் கண்களில் தெரிகின்றது
உலகம் சுற்றிய களைப்பு தலைவியின் கண்களில் தெரிகின்றது
பாவம் புள்ள……
இதனால் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு தலைவி அரசியல் களத்திற்கு வருவார் என சங்கம் தெரிவித்துகொள்கின்றது
அந்த கண்கள் களைத்தாலும் ஒரு அழகு தெரிகின்றதல்லவா? அட
அட அட
தெய்வீக அழகு என்பது இதுதான், இது மட்டுமே தான்
நேற்று அரண்மனை 2 படம் ஓடிகொண்டிருந்தது, படம் பற்றி யோசித்தால் படம் ஏன் பெரும் வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைத்தது
இயக்குநர் கடைசி காட்சியில் சொதப்பிவிட்டார்
அந்த கொடூர பேய் கோவிலுக்குள் வரும்பொழுது தலைவியின் தெய்வாம்சம் பொருந்திய முகத்தை கண்டாலே ஓடியிருக்கும்
தலைவியினை அம்மன் சாயல் முகத்தோடு தெய்வீகமாக காட்டி இருந்தால் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்
மாறாக அவரை உக்கிரமாக ஆடவைத்ததில் காட்சி அமைப்பு திசைமாறி பார்வையாளர்கள் பேயினை மறந்து தலைவியின் அற்புத நடனத்தில் லயித்துவிடுகின்றனர்
இதனால் படத்தோடு பின்னர் அவர்களால் இணையமுடியவில்லை
அதன் பின்பும் ஒரு வாய்ப்பு இருந்தது, தலைவி புன்னகைத்து எல்லோருக்கும் அருளாசி வழங்கி படம் முடிந்திருந்தால் அந்த ஆசிபெறவே தியேட்டரில் கூட்டம் கூடியிருக்கும்
இரு வாய்ப்புகளையுமே இயக்குநர் வீணடித்ததுதான் படத்தின் தோல்விக்கு காரணம்
இனியாவது அத்தவறுகளை அந்த இயக்குநர் செய்யாமல் இருக்கட்டும்
ஆனாலும் தலைவின் நடனம் கைலாயத்தில் ஆடும் சக்தி நடனம் போலவே இருந்தது