பாஜகவின் பலத்தை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ளவே முடியாது : தமிழிசை
தலைவர் வழிகாட்டிட்டார், இனி மெக்கா போயிட்டு மசூதி முன்னால நின்னுட்டு வந்தா போதும்…
பாஜகவின் பலத்தை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ளவே முடியாது : தமிழிசை
ஆம், எதிரி கண்ணுக்கு தெரிந்தால் எதிர்கொள்ளலாம். தெரியாத வைரஸை மருந்து தெளித்துத்தான் விரட்ட முடியும்
காவேரி விவகாரத்தில் எங்கள் பொறுமையினை மத்திய அரசு சோதிக்கின்றது : குமாரசாமி
இப்படி கோபபடவேண்டியவர் பழனிச்சாமி, அவரே மகா அமைதியாக இருக்க ஆச்சரியமாக குமாரசாமி பொங்கிகொண்டிருக்கின்றார்
8 வழிச்சாலையில் நிலமிழக்கும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்ட ஈடு வழங்கபடும் : செய்தி
ஆக சாலை அமைக்கும் செலவோடு நஷ்ட ஈடும் சேர்ந்து செலவு தொகை அதிகரிக்கின்றது
நஷ்ட ஈட்டு தொகையுடன் கொஞ்சம் கூடுதல் தொகை சேர்த்தால் சிக்கலான இடங்களில் நல்ல பாலம் கட்டிவிடலாம் ஒருவருக்கும் சிக்கல் இல்லை
தொழில்நுட்பம் மிகுந்த காலத்தில் இதை செய்யலாமா என்றால் நிச்சயம் செய்யலாம்.
பழனிச்சாமி உருப்படியாக இருந்தால் ஆளுநர் ஏன் “மாதம் மும்மாரி பொழிந்ததா?” என நகர்வலம்வரபோகின்றார்?
அந்த பழனிச்சாமிக்கு கருப்பு கொடியோ, செருப்பு கொடியோ காட்டாத ஸ்டாலின், ஆளுநரை குறிவைத்து கொடிபிடிப்பது பழனிச்சாமிக்கு வக்கலாத்து வாங்குவதை தவிர வேறு எதுவுமில்லை
நல்ல மாணவர்களாக உருவாக மாணவர்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் : செய்தி
எங்கே? பேராசிரியர்களுக்கு ஒழுக்கம் அவசியம் என சொல்லிவிடட்டும் பார்க்கலாம்..