விஜய் என்பவரை நடிகர் என்ற வகையிலேயே சேர்க்க முடியாது …..

Image may contain: 9 people, people smiling, text

விஜய் என்பவரை நடிகர் என்ற வகையிலே சேர்க்க முடியாது

விஜயகாந்தின் வளர்ச்சியில் எஸ்.ஏ சந்திரசேகரின் பங்கு முக்கியமானது, அணல் தெரிக்கும் வசனங்களை எப்படி பேசுவது என விஜயகாந்திற்கு சொல்லிகொடுத்த சந்திரசேகர் தன் மகனுக்கு சொல்லிகொடுக்காமல் போனது மகா சோகம்

மனிதர் பேசினால் வாயினை திறக்கின்றாரா இல்லையா என்பதே தெரியாது, சில படங்களில் கிராபிக்ஸ் வைத்து வாயினை அசைக்கின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டதுண்டு

முழங்கைகளிலும், முழங்காலிலும் அவருக்கு ஏதோ சிக்கல் என்பது அவரின் நடனத்தில் தெரிகின்றது, அந்த இடத்தில் சிக்கல் உள்ளவனுக்கு காக்கா வலிப்பு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அவரின் நடனம்

மனிதரின் பெரும் பலம் அவரின் தந்தை , மிக சிறந்த டைரக்டர்களாக பார்த்து அவரை ஒப்படைத்தார், அதே நேரம் பூவே உனக்காக போன்ற இமேஜ் வராமலும் பார்த்துகொண்டார்

ராமசந்திரனே வசூல் சக்கரவர்த்தி என சொல்லபட்ட தமிழகத்தில் விஜயும் அப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம்

மனிதருக்கு தந்தை எவ்வளவு பலமோ அவ்வளவிற்கு பலவீனமும் அவரே

அரசியல் ஆசை அவருக்கு கொஞ்சமல்ல, மிக நுட்பமாக அண்ணாவின் இளைய தளபதி பட்டத்தை அன்றே புகுத்தியவர், இப்பொழுது ஸ்டாலின் செயல் தலைவர் ஆனதும் அந்த தளபதி பட்டம் உதயநிதிக்குத்தான் சென்றிருக்க வேண்டும்

ஆனால் இவரோ தளபதி விஜய் என உருவாக்கி வைத்திருக்கின்றார்

ஜெயா இருந்தவரை இவர்களை மிரட்டி உருட்டி வைத்திருந்தார், தலைவா சிக்கலில் கண்ணீருடன் அம்மா என கலங்கிநின்ற விஜய்க்கு அக்காட்சி என்றும் களங்கமே

இப்பொழுது ஜெயா இல்லா நிலையில் சந்திரசேகரின் நகர்வுகள் விஜயினை அரசியலை நோக்கியே தள்ளுகின்றன‌

ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக பழனிச்சாமி அட்டகாசமாக தூள்கிளப்பும்பொழுது சந்திரசேகர் யோசிக்கின்றார்

விஜய் நடிகரா இல்லையா என்பது வேறு விஷயம், ஆனால் 
அந்த விபரீத அரசியல் ஆசையினைத்தான் கண்டிக்கின்றோம், காக்கா வலிப்பு வந்ததை போல ஆடதெரிந்ததை தவிர இவர் அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கின்றது?

அந்த ஒரு ஆசையினையும் அவர் தவிர்த்துவிட்டு நடித்துவிட்டு போகட்டும், அஜித் என்பவரே நடிப்பதாக பல படங்களில் நடந்துகொண்டே இருக்கும்பொழுது இவருக்கு என்ன?

விஜய் அரசியலுக்கு வராமல் இருப்பது வரை அவருக்கு நல்லது

அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் எம்மை பொறுத்தவரை குஷ்புவுடன் நடித்த மின்சார கண்ணா மிக சிறந்த படம்

குஷ்புவிற்காக அதை பலமுறை பார்த்தபொழுது இவரையும் பார்க்க முடிந்தது

மற்றபடி சோகம் மறந்து சிரிக்க வேண்டுமென்றால் இவரின் கண்ணுக்குள் நிலவு என்றொரு படம் உண்டு. மனிதர் மனநிலை பிறழ்ந்த வேடத்தில் நடித்திருப்பார்

அந்த நடிப்பினை பார்க்கும்பொழுதெல்லாம் எந்த சோகத்திலும் சிரிப்பு வரும், அதுவும் இவர் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவினை பார்த்து சிரிப்பார் அல்லவா? அப்படி நிற்காமல் சிரிப்பு வரும்

உண்மையில் அந்த ஒரு படத்தில்தான் இவர் இயல்பாக நடித்திருந்தார், அதற்கே சிரித்து முடியவில்லை

இன்னும் அப்படி சில படங்கள் வந்தால் கண்டிப்பாக‌ பார்க்கலாம்..