மோடி அரசில் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணி ராஜினாமா

Image may contain: 1 person\

அமெரிக்காவிலிருந்து வந்து மோடி அரசில் பொருளாதார ஆலோசகராக அமர்ந்த‌ அர்விந்த் சுப்பிரமணி தன் பதவியினை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவிற்கே ஓடியிருக்கின்றார்

அவர் ராஜினாமா செய்தது, பறந்தது எல்லாம் சாதரண காலங்கள் என்றால் யாருக்கும் சந்தேகம் வராது

ஆனால் டிரம்ப் அந்நிய நாட்டு பொருட்களுக்கு வரிவிதித்து வம்பிழுக்கும் காலங்களில் அவர் சென்றிருப்பதுதான் சந்தேகம்

இந்தியாவும் அவர் கிளம்பிய பின் அமெரிக்க இறக்குமதிக்கு வரியினை உயர்த்தி பதிலடி கொடுத்திருக்கின்றது

ஆக என்ன நடந்திருக்கலாம்?

அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதிக்க கூடாது என அவர் டெல்லியில் லாபி செய்திருக்கலாம், இந்தியா மண்டையில் தட்டி அமெரிக்காவிற்கே ஓடு என விரட்டியிருக்கலாம்

அன்னார் அமெரிக்க விசுவாசியாக இருந்திருக்கின்றார், அமெரிக்க நலனை இங்கு காக்க முடியாமல் ஓடி இருக்கின்றார் என்பதுதான் விஷயம்