இன்று சர்வதேச யோகா தினம்
இன்று சர்வதேச யோகா தினம் , உத்திராகாண்டில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்வில் பங்கெடுக்கின்றார் மோடி
யோகாவினை பிரபலபடுத்திய பிரதமர் மோடி அதில் பங்கெடுக்கின்றார், நல்லது.
மோடி வித்தியாசமனாவர் இங்கு யோகா என்றாலும் பங்கெடுப்பார், ஜப்பானில் ஜாலியாக டிரம் அடிப்பார், மலைவாழ் மக்களோடு அவர்கள் கலாச்சார ஆடையில் போஸ் கொடுப்பார்.
ஒரு பிரதமருக்கான பணி இதுதான் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதற்குத்தான் இத்தேசம் நம்மை பிரதமராக ஆக்கி இருக்கின்றது என மகா உறுதியாக நம்புகின்றார்
அதனால்தான் பாராளுமன்றத்திற்கே ஒழுங்காக செல்லாத மோடி, யோகா என்றவுடன் அய்ய்ய் என குதித்து உத்திரகாண்டுக்கு ஓடிவிட்டார்
யோகாவினை தொடர்ந்து இனி பரதநாட்டியத்தை பிரபலபடுத்துவோம் என யாரும் சொன்னாலும் தயக்கமின்றி ஓடுவார் மோடி.
ஒருவேளை விரைவில பரதநாட்டியத்தை இத்தேசம் பிரபலபடுத்தி, பாபா ராம்தேவ் போல இன்னொருவர் பரத குரு என வந்து, பரதநாட்டியம் , குச்சுபிடி போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களை பிரபலபடுவது நடக்கலாம்
இது இந்திய பாரம்பரியம் என சொல்லி அவர் மோடியினை அழைத்து விட்டால், மோடியும் மிக சந்தோஷமாகிவிட்டால் என்ன ஆகும்??
ஆர்வமாக யோகாவில் பங்கேற்கும் மோடி, பரதநாட்டியம் என்றால் மட்டும் சலங்கை கட்டி போகமாட்டாரா?
அப்படி சென்றுவிட்டால் ஐஸ்வர்யா தனுஷுக்கும், பவர் ஸ்டாருக்கும் ஒரு போட்டியாளர் உருவாகிவிடும் ஆபத்து உண்டு