தலைவி உள்ளம் உருகிவிட்டார்
உங்கள் உடல் நலத்தை பார்த்துகொள்ளுங்கள் என சங்கம் கோரிக்கை வைத்ததில் தலைவி உள்ளம் உருகிவிட்டார்
அவர் சிறிய அறுவை சிகிச்சை செய்தபொழுது சங்கத்தாரின் மண்சோறு, விரதம், தீ மிதித்தல் இன்னபிற விஷயங்களால் நிரூபிக்கபட்ட சங்கத்து பக்தி தலைவியினை உருக வைத்தது
தனக்காக கோடான கோடி உறுப்பினர்கள் தவித்துகொண்டிருக்கின்றார்கள் என்ற பொறுப்பில் இப்பொழுது தன் உடல் நலத்தை காக்க பயிற்சிகளில் இறங்கிவிட்டார்
இதோ அவரின் தற்போதைய படம், வருஷம் 16ல் பார்த்த அதே முகம்.
“என்றைக்கும் வயசு மூவாறு.. என் சொல்லு பலிக்கும் பாரு” என பாட்டெழுதிய கங்கை அமரனின் வரிகள் சாகாவரம் பெற்றவை
சங்கத்தின் கோரிக்கைக்காக தன் உடல் இளைத்த தங்க தலைவிக்கு கோடான கோடி நன்றிகள்
(இனி விஜய் என்பவர் தன் அடுத்த படத்தில் தலைவியின் ஜோடியாக நடிக்கவில்லை என்றால் சங்கம் பாமாகவுடன் இணைவதை தவிர வேறு வழி இல்லை
அஜித் என்பவருக்கு பின்னால் இருக்கின்றது..).