தாமரை என்ன தமிழக பாலைவனத்திலா மலரும்??
காவேரியில் இன்னும் நீர்வரவில்லை, வருவது போலவும் குமாரசாமி பேசவில்லை
முன்பு சீறிய ஒருபயலையும் தமிழகத்தில் இப்பொழுது காணவுமில்லை, ஐபிஎல் இங்கு நடக்காமல் போனதுதான் நடந்தது
கன்னட தேர்தலில் சில விஷயங்களுக்காக இங்கு பொங்கி இருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது
கன்னட தேர்தல் முடிவு வந்ததில் இருந்து, அதுவும் பாஜக அரசு அமையாமல் போனதில் இருந்து எல்லோரும் அமைதி
இது கண்டிக்கதக்கது
ராகுல் முதல் ஸ்டாலின் வரை அரசியல்வாதிகளும், பாரதி ராஜா முதல் அங்கிள் சைமன் வரை போராளிகளும் அந்த நோக்கில்தான் செயல்பட்டிருக்கின்றார்கள், எல்லாம் அரசியல்
ஒரு பயலும் உருப்படி இல்லை
குமாரசாமிக்கு செக் வைக்கும் விதமாக காவேரியில் ஆட மோடி அரசுக்கும் தெரியவில்லை
பின் தாமரை என்ன தமிழக பாலைவனத்திலா மலரும்??
“தென்கிழக்கு சீமையில..
செங்காட்டு பூமியில ..
ஏழப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் கருக்கு..”
கோவில் சிலையினை காணவில்லை என விசாரித்த பிரிவினை பழனிச்சாமி முடக்கி இருகின்றார், அது பற்றி கவலை இல்லை
ஆனால் ஸ்டாலின் நெற்றி குங்குமம் காணாமல் போனதற்கு விசாராணையாம்
இவரை எல்லாம்……………