வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் : நீதிபதி கிருபாகரன்
நீதிபதி கிருபாகரன் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என பரபரப்பாக பேசி இருக்கின்றாராம்
பொதுவாக நீதிபதிகள் சட்டத்தின் அடிப்படையில்தான் பேச வேண்டும் அதுதான் விதி, அவர்கள் தகுதிக்கான விஷயம்
சட்டத்தில் இல்லாத எதுபற்றியும் அவர்கள் பேசினால் அவர்கள் தரம் கெடும், இதனை நீதிபதி கவனத்தில் கொள்வது நல்லது
வாரிசு அரசியல் என்பது அமெரிக்காவில் இருந்து வடகொரியா வரை உலகெல்லாம் நடக்கும் விஷயம், அரசியல் என்பது அப்படித்தான்
ஜனநாயக நாட்டில் , ஆள்பவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொடுக்கபட்டிருக்கும் நிலையில் வாரிசு அரசியல் விஷயமே அல்ல, மக்கள் நினைத்தால் தேர்ந்தெடுப்பார்கள் இல்லை விரட்டிவிடுவார்கள்
இதே நீதிபதியிடம் “அய்யா நீதிபதியின் மகன் நீதிபதி ஆக கூடாது என சட்டம் இயற்றலாமா?” என கேட்டால் அது நீதிபதி அவமதிப்பு ஆகிவிடும்