நடிகனாக ஆகி இருந்தால் ஜெயலலிதாவோடு நடித்து இருப்பேன் : துரைமுருகன்

நடிகனாக ஆகி இருந்தால் ஜெயலலிதாவோடு நடித்து இருப்பேன் : துரைமுருகன்

சொல்ல நன்றாகத்தான் இருக்கின்றது, ராமசந்திரன் விட்டிருப்பாரா?

எஸ்.எஸ்.எஸ் ராஜேந்திரன் முதல் ஜெய்சங்கர், ரஜினி வரை ஜெயலிதாவோடு நடிக்க ஆசைபட்டு அவரிடம் வாங்கிய அடி கொஞ்சம் அல்ல‌

அவரின் வெறும் மிரட்டலிலே ஐதாராபாத்திற்கு அங்கு ஓடினார் சோபன்பாபு, அதுவும் ஜெயாவிற்கு கட்டிய தாலியினை கழற்றாமலே ஓடிவிட்டார்,

மதுரை பழக்கடை பாண்டி என்ன ஆனார் என்பது வரலாறு

இதுபோக ரகசிய கதைகள் ஏராளம் உண்டு, கதைதான் ரகசியமே தவிர , ஜெயாவிற்காக அவரிடம் பலர் வாங்கிய அடிகள் ஒன்றும் ரகசியமே அல்ல‌

ராமசந்திரனை மீறி யாராவது ஜெயாவினை நெருங்க முடியுமா? இல்லை அப்படி நினைத்துவிடத்தான் முடியுமா?

(இப்பொழுது கூட செத்தபின் தன் கல்லறை அருகே அவரை பிடித்து வைத்திருக்கும் பெரும் எமபாதகன் ராமசந்திரன்)

அக்காலம் அப்படி இருக்க துரைமுருகன் நடிகராகி இருந்தால் இப்போது இருக்கும் கிழிந்த வாய் இன்னும் அதிகமாக காதுவரை ராமசந்திரனால் கிழிக்கபட்டிருக்கும் என்பதே உண்மை


எவனோ ஒருவன் அண்ணாதுரைக்கு பின் தாழ்த்தபட்ட சத்தியவாணி முத்துவினை முதல்வராகாமல் சதி செய்து திமுக தடுத்தது, அவர் பறையர் சாதி என்பதால் தடுத்தார்கள் என்றெல்லாம் கிளம்பி இருக்கின்றான்

அவன் ரஞ்சித் கோஷ்டியாக இருக்கலாம், அவர்கள்தான் இப்படி எல்லாம் உளறுவார்கள்

அப்படி எல்லாம் நடக்கவில்லை, அன்றைய காலத்தில் நடந்த காரணங்களே வேறு

ஆனால் பறையரை விட தாழ்ந்த சாதியான, பெயர் சொல்லவே பலர் விரும்பாத அந்த சாதியின் கலைஞரைத்தான் திமுக அடுத்த முதல்வர் ஆக்கியது

இதை எல்லாம் குதர்க்க புத்தியுடன் கவனிப்பவனுக்கு திராவிட இயக்கத்தின் தலைவியாக பார்ப்பன ஜெயலலிதா அமர்ந்தது மட்டும் கண்ணுக்கே தெரியாது