உலகத்து பெரும் போர்கள் எல்லாம் வியாபார கணக்கிலே நடப்பவை
இந்த உலகத்து பெரும் போர்கள் எல்லாம் வியாபார கணக்கிலே நடப்பவை, வீரத்தை காட்டும் போர் எல்லாம் கடல் கொண்ட லெமூரியா காலத்தோடு முடிந்தது
அலெக்ஸாண்டர் காலமுதல் இரண்டாம் உலகபெரும்போர் வரை எல்லாவற்றிலும் வியாபார கணக்கு இருந்தது, அது அல்லாது போரே இல்லை
இப்பொழுது டிரம்ப் அதற்கு தயாராவது போல் தெரிகின்றது, அவர் செய்த வரி விதிப்பு விஷயங்கள் உள்நாட்டிலே சர்ச்சையாகின்றன, ஹார்லி டேவிட்சன் போன்ற கம்பெனிகள் நடையினை கட்டிவிடுவோம் என எச்சரிக்கின்றன
இதுபோன்ற பல கம்பெனிகள் டிரம்பினை எச்சரிக்க்கின்றன அவரோ கொஞ்சமும் யோசிப்பதாக தெரியவில்லை
அங்கும் சிக்கல் வந்தாயிற்று.
உண்மையில் என்ன நடக்கின்றது என்றால் அமெரிக்கா சொந்த உற்பத்தியில் முண்ணணியில் இருந்ததெல்லாம் ஒரு காலம், டிவி முதல் கார்வரை அவர்களே செய்தார்கள் எல்லாம் நலமாயிருந்தது
இரண்டாம் உலகப்போருக்கு பின் அவர்களின் கண்ணசைவில் பெரும்பாலான தொழில்கள் தென்கொரியா,ஜப்பான், தைவான் கொஞ்சம் சீனா என மாற்றி கொண்டார்கள்
ஜப்பானின் மீதான அணுகுண்டு பழிக்கு அவர்கள் கோபம் எடுக்காமை, ரஷ்யா எல்லையில் அமெரிக்க பிடி இது போக சோவியத் யூனியனுக்கு எதிரான சீன ஆதரவு என பல கணக்குகள் உண்டு
தொழில்வாய்ப்பு இப்படி சென்றாலும் எண்ணெய் வியாபாரம் முதல் பல விஷயங்களில் டாலரை நிறுத்தினார்கள், இன்னும் பல மாயம் செய்தார்கள்
உண்மையில் 2008 பொருளாதர சிக்கலில் இருந்து அமெரிக்கா முழுக்க மீண்டுவிட்டதா என்றால் இல்லை, சமாளிக்கின்றார்களே தவிர நாடு இன்னும் நிதி சிக்கலிலேத்தான் இருக்கின்றது, இதனால்தான் ஒரு மாதிரி அலைகின்றார் டிரம்ப்
ஆனால் எண்ணெய் வியாபாரம் டாலரில் நடப்பது அவர்களின் பெரும் பலம்
இதற்கு குறுக்கே யார் வந்தாலும் சாய்த்தார்கள், சதாம் எல்லாம் அப்படித்தான் ஒழிக்கபட்டார். சவுதி குவைத் பஹ்ரைன் கத்தார் எல்லாம் அவர்களுக்கு பழனிச்சாமி ஆகின
ஈரான் தனித்து நிற்கின்றது, அது சிரியா ரஷ்ய கூட்டணியில் இருக்கின்றது
ஈரானின் எண்ணெயினை கொள்ளையிட அமெரிக்கா செய்த அத்தனை முயற்சிகளையும் அந்நாடு தடுத்துவிட்டது, நிச்சயம் ஆச்சரியம்
ஈரானை ஒரு நாள் அடிக்க வேண்டும் என அமெரிக்கா முடிவு செய்தாலும் மகா அவசரம் இஸ்ரேலுக்கு
ஈராக் , ஏமன், சிரியா என பலநாடுகளை கட்டுபடுத்தும் ஈரான் மிக நெருக்கமாக இஸ்ரேல் அருகில் வந்தாயிற்று, இனி யுத்தம் மூளும் நேரம் அது இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்து
தன் காலடியில் வந்துவிட்ட ஈரானை சிரியாவில் இஸ்ரேல் அடித்தாலும் ஈரான் அசைவதாக தெரியவில்லை, ஈரானை நொறுக்கியே தீரவேண்டும் என முடிவு செய்த இஸ்ரேல் அமெரிக்காவினை இழுக்கின்றது
வடகொரிய சர்ச்சையினையே இன்னும் தீர்க்காத அமெரிக்கா ஈரானை மண்டியிட செய்ய கடும் முயற்சி எடுக்கின்றது, ஆனால் தோல்வியே
முன்பே கடும் பொருளாதார தடைகள் நினைத்தபலனை அமெரிக்காவிற்கு கொடுக்கவில்லை, சிக்கல்களை சமாளித்து அது போக்கில் நிற்கின்றது ஈரான்
இதனால் இம்முறை மிக கடுமையான தடைகளை அறிவிக்க போகின்றது அமெரிக்கா அத்தோடு அதோடு உறவு வைக்கும் எல்லா நாடுகள் மேலும் பொருளாதார தடையாம்
இந்திய கணக்கு வேறு, பாகிஸ்தானில் சீனா கட்டிய துறைமுகத்திற்கு செக் வைக்க ஈரானில் சபாஹர் துறைமுகத்தை அமைத்திருக்கின்றது இந்தியா
ஈரானும் இந்தியாவில் அவசரகால எண்ணெய் குடோனை எல்லாம் அமைத்திருக்கின்றது, எளிதில் பிரிக்க முடியாதநாடு ஈரான்
ஆனால் சீனா, இந்தியா, துருக்கி, இலங்கை என ஈரானிடம் இருக்க்கும் கூட்டாளி நாடுகளிடம் எல்லாம் பொருளாதார தடை என மிரட்டுகின்றது அமெரிக்கா
இந்தியா மீது அத்தடை விதிக்கும் பட்சத்தில் சில சிக்கல்களை நாடு சந்திக்க நேரிடும். நிச்சயம் தடுமாறும்
ஈரான் போல எண்ணெய் வளமும் இல்லை ரஷ்யா சீனா போல தொழில்நுட்பமும் இங்கு இல்லை என்பதால் சிக்கல் வரும்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணமும் சரிகின்றது
இந்தியாவிற்கு சிக்கலான நேரம் ஈரானை விடவும் முடியாது, அமெரிக்காவினை எதிர்க்கவும் முடியாது
ஒருமாதிரியான ராஜ தந்திர நகர்வு வேண்டும், அதாவது சீனா ரஷ்யாவுடன் இணைந்து கூட்டு அறிக்கை போல செய்து எதனையாவது குழப்பி அடித்து அமெரிகாவினை திசை திருப்பலாம்
ஆனால் செய்வார்களா என்றால் சிக்கல், இப்பொழுதுதான் சீனா, ரஷ்யா என மோடி பறக்க வேண்டிய நேரம். ஆனால் அவரோ இப்பொழுதுதான் ஓய்வில் இருக்கின்றார்
முதலில் செய்யவேண்டியது உலக வங்கி எனும் உலக கந்துவட்டிகாரனிடம் வாங்கி இருக்கும் கடனை அடைப்பது, அதுதான் முக்கியம்
அதை முழுவதும் அடைக்காமல் இந்தியா நிமிர முடியாது. பல நாடுகள் அப்படித்தான் உலக வங்கியினை விரட்டியபின் நிமிர்ந்து நிற்கின்றன
சில லட்சம் கோடி கடனை இந்தியா அடைத்தால் நல்லது, என்ன செய்யலாம்?
இத்தேசத்தில் பணம் உண்டா என்றால் உண்டு, அரசியல்வாதிகளிடம் குவிந்திருக்கும் பணமே பல மடங்கு கடன்களை அடைத்து சில நாடுகளையே வாங்கும் அளவு இருக்கின்றது
ஆனால் அதிரடி நடவடிக்கைகள் தேவை
அதுவுமல்லாது மக்களே முன்வந்து அடைத்தால் இன்னும் நல்லது, ஒரு வங்கி கணக்கை திறந்து தேசத்தை மீட்போம் என ஆளாளுக்கு அள்ளிகொடுத்தால் நிச்சயம் விடிவு உண்டு
தேசத்தை மீட்போம் என்றொரு திட்டத்தை அறிவித்து மக்களிடம் நன்கொடை திரட்டுவது சிக்கலில்லை, இத்தேசம் அள்ளிதரும்
ஆனால் அதன்பின் அதன்மேலே ஊழல் சர்ச்சை வரும் அதற்கொரு கமிஷன் அமைக்க வேண்டும், வழக்கு விசாரணை என எல்லாம் நாசமாகும். இத்தேசத்தின் தலைவிதி அப்படி
தன் டாலரை நிலை நிறுத்த பெரும் போருக்கு தயாராகின்றது அமெரிக்கா, தன் பாதுகாப்பிற்காக அரேபியாவில் பெரும் போரை தொடக்கி ஈரானை நொறுக்க கிளம்பியிருக்கின்றது இஸ்ரேல்
நமக்கு தோல்வி என்றால் இஸ்ரேலும் அமெரிக்க முகாம்களும் அத்தோடு அமெரிக்க பழனிச்சாமிகளான சன்னி அரேபிய சுல்தான்களும் இருக்கவே கூடாது என வரிந்து கட்டுகின்றது ஈரான்
இச்சிக்கலில் இந்தியாவும் இழுபட்டு நிலமைகளை கவனிக்கின்றது
இம்மாதிரி நேரத்தில் இந்தியாவிற்கு வழிகாட்ட சாட்சாத் மன்மோகன், சிதம்பரம் போன்றோரால்தான் முடியும், மோடி அரசால் சுத்தமாக முடியாது என்பது பாஜக தலைவர்களே ஒப்புகொண்ட விஷயம்
ஏதேனும் ஒரு முடிவுக்கு மோடி அவசரமாக வந்து சில நகர்வுகளை செய்யாவிட்டால் தேசம் பெரும் சுழலில் சிக்கும்
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தபட்டால் ஈரானின் சபாஹரில் இந்தியா கட்டியிருக்கும் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றபடலாம்
அந்த இடத்தில் சீனா அமர்ந்து கொண்டால் இந்தியாவிற்கு மாபெரும் சிக்கல்
அமெரிக்காவிற்கு பயந்து பல தவறான முடிவுகளை எடுக்கின்றது மத்திய அரசு
மாநில அரசு மத்திய அரசுக்கு அடிமை, மத்திய அரசு அமெரிக்க அரசுக்கு அடிமை
இதற்கு நாம் நேரடியாக அமெரிக்காவோடு இந்தியாவினை 51ம் மாநிலமாக இணைக்க சொல்லிவிடலாம், நாமும் அமெரிக்க குடிமக்களாகிவிடலாம்
இந்தியாவும் வல்லரசாகிவிடும்