பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை
பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை
எந்த பிரபலத்திற்காக அம்மாணவியரை மூளை சலைவை செய்தார் என்ற விசாரணையினை நடத்துங்கள் என்றால் குரல் அவருடையதா? என விசாரிக்கின்றார்களாம்
குரல் அவருடையது என தெரியாமலா கைது செய்து அடைத்தார்கள்?
இதனிடையே ஆளுநரும் ஒரு கமிஷன் போட்டு விசாரித்து அந்த அறிக்கையினை அவரே வாங்கியும் கொண்டார்
அந்த அறிக்கையும் வராது, நிர்மலா யாருக்காக இந்த அந்தபுர தோழி வேலைபார்த்தார் என்ற தகவலும் வெளிவராது
வரும் செய்தி எல்லாம் இவர்தான் நிர்மலா தேவி, இவரின் குரல் இப்படித்தான் இருக்கும் அவ்வளவுதான்
இனி சில வழக்குகளில் இவர்தான் கொலையாளி ஆனால் யாரை கொன்றார்கள் என சொல்லமாட்டோம்
இவர்தான் திருடன் ஆனால் எங்கு எவ்வளவு கொள்ளை அடித்தார் என நாங்கள் சொல்லமாட்டோம் என விரைவில் சொல்வார்கள்
நாமும் திருடன் ஒழிக, கொலையாளி ஒழிக என சொல்லிவிட்டு வந்துவிட வேண்டியதுதான்