ஈரான் ரவுடி நாடு
“ஈரான் ரவுடி நாடு , ஏமனில் சிரியாவில் ஈராக்கில் அது கலகம் செய்கின்றது, அதை ஒடுக்க வேண்டும். அந்த ரவுடி அணுகுண்டு செய்துவிட்டால் அவனை அடக்க முடியாது, அவனை பட்டினி போட்டு வழிக்கு கொண்டுவர வேண்டும்..” என இந்தியாவிடம் ஈரானுடன் உறவு கொள்ளாதே என மிரட்டுகின்றது அமெரிக்கா
இந்தியா என்ன செய்ய வேண்டும்?
“அதை விட மோசமான ரவுடி பயல் பாகிஸ்தான், காஷ்மீர் முதல் அவனால் பல சிக்கல். இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளுக்கு எல்லாம் அவனே அடைக்கலம்
பாகிஸ்தானை தனிமைபடுத்தி அடக்குங்கள், அதன் பின் ஈரான் பக்கம் செல்லலாம்..” என சொல்ல வேண்டும்
சொல்வார்களா என்றால் இல்லை, அதற்கு அகன்ற மார்பு வேண்டுமாம்
இதே மோடி எதிர்கட்சியாக இருந்தால் 56 இன்ஞ் மார்பு வந்துவிடுகின்றது, ஆளும் கட்சியாக இருந்தால் மார்பே இல்லாத அதிசய பிறவியாகிவிடுகின்றார் மோடி
இந்தியா பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பில்லாத நாடாம், சொல்வது யாரென்றால் வெளிநாட்டினர்
அமெரிக்க வெள்ளை மாளிகையில் மோனிகா லெவன்ஸ்கி பாதுகாப்பாகவா இருந்தார்?
வாரத்திற்கு 3 துப்பாக்கி சூடு நடக்கும் நாடு அமெரிக்கா, ஆசிரியரும் மாணவர்களும் கொல்லபட்டுகொண்டே இருக்கின்றனர்
எங்காவது ஒரு சத்தம், அமெரிக்கா பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லா நாடு என வந்திருக்கும்?
வரவே வராது
பிரான்சில் கொள்ளை கும்பல் அசத்துகின்றது, பாதுகாப்பு நிறைந்த வைரகடை முதல் பிரபலங்கள் தங்கும் நட்சத்திர ஹோட்டல் வரை சும்மா கீரை கட்டு அள்ளுவது போல கொள்ளை நடக்கின்றது, ஸ்பெயின் இன்னும் மகா மோசம் என்கின்றார்கள்
அதெல்லாம் யார் வாயிலும் வராது, எந்த எழுத்திலும் செய்தியிலும் வராது
ஆனால் இந்தியா என்றால் பொங்கிகொண்டு வருவார்கள்
அமெரிக்க துப்பாக்கி சூடும் அதில் சாகும் அப்பாவி மாணவர்களையும் யாராவது கணக்கில் எடுத்தார்களா?
அப்படி எடுத்தால் எது பாதுகாப்பே இல்லாத நாடு என தெரிய வரும்
வல்லவன் வகுத்ததே நீதி என்பதை இனி வல்லவன் சொன்னதே செய்தி என திருத்திகொள்ளலாம்
சமூக ஊடகங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க இளைஞர்களுக்கு மோடி அழைப்பு
எதற்கு? அம்பானி மகன் கல்யாணத்தை எப்படி சிறப்பிக்க என ஐடியா கொடுப்பதற்கா?
சமூக ஊடகங்களில் இளைஞர்கள் ஏராளமான கருத்துக்களை சொல்லிகொண்டுதான் இருக்கின்றார்கள், இவர்தான் கேட்பதே இல்லை
அப்படி இளைஞர்கள் என்ன சொல்கின்றார்கள்? இவரை தன் பரிவாரங்களுடன் உடனே பதவி விலக சொல்கின்றார்கள்