அந்த நள்ளிரவு கைது

Image may contain: 5 people, people standing

அந்த நள்ளிரவு கைது, எமர்ஜென்ஸிக்கு அடுத்து தமிழகம் கண்ட பெரும் கொடுமை. ஒரு அடிப்படையுமின்றி குற்றசாட்டுமின்றி, நீதிமன்ற ஆணையுமின்றி அவரை வீடுபுகுந்து கைது செய்தது ஆணவத்தின் உச்சம்

கலைஞர் வரமாட்டேன் என சொல்லவில்லை, அப்படி சொல்பவரும் அல்ல மாறாக 80 வயதினை நெருங்கி இருந்த அவரால் நள்ளிரவில் உடனே தயாராக முடியவில்லை, அதற்குள் வலுகட்டாயமாக தூக்கிய காட்சிகள் தமிழக வரலாற்றின் பெரும் கறை

கலைஞர் கைது செய்யபட்டார், அதன் பின் நீதிவேண்டி நீதிபதி வீட்டு வாசலில் முதிர்ந்த வயதில் லுங்கியோடு அமர்ந்து போராடினார். மொத்த தமிழகமே அதிர்ந்த நேரமிது அவர் மேல் பெரும் அனுதாபம் பிறந்தது

பின் அது ஆதாரம் என ஒன்றுமே இல்லாத வழக்கு என அடிபட்டுபோனது வேறு விஷயம்

கலைஞர் அதை சாதாரணமாக கடந்து சென்றார், அவர் பார்க்காத கைதா? சிறையா? வழக்கா?

இதற்கு மேல் உன்னால் என்ன செய்துவிட முடியும் என அசால்ட்டாக இருந்தார்.

ஆனால் கலைஞரின் கைதிற்கு காரணம் கேட்ட முரசொலி மாறன், அறுவை சிகிச்சை செய்தவர் என்றும் பாராமல் மிக கடுமையாக பொலிசார் நடந்துகொண்டனர்

அது அவரின் உடல்நிலையினை பாதித்து அப்படியே மாறன் மறைந்தும் போனார்

உண்மையில் முரசொலிமாறனுக்கு நடந்தது கொலை, அதுதான் நடந்தது. அச்சம்பவம் நடந்திராவிட்டால் மாறனின் நாட்கள் நீடிக்கபட்டிருக்கும்

தன் கண்முன்னால் முதிர்ந்தவயதில் கலைஞர் இழுத்து செல்லபடுவதை கண்டு மனதால் நொந்து நோயினை தீவிரபடுத்திகொண்டார் மாறன்

கலைஞர் மீதான அவரின் பாசம் அப்படி இருந்திருக்கின்றது, இன்றும் கலைஞர் வீட்டு முன்னறையில் அவர் படம் சிரித்துகொண்டிருப்பதிலும் அர்த்தம் இருக்கின்றது

எல்லாவற்றையும் தாங்கினார் கலைஞர், இந்த அனுதாபமே அவருக்கு 2004ல் பெரும் பாராளுமன்ற வெற்றியினையும் அடுத்து சட்டமன்றத்து ஆட்சியினையும் கொடுத்தது

டான்சி வழக்கில் சிறை சென்ற ஜெயா, ஆட்சிக்கு வந்த மமதையில் செய்த மாபெரும் அநியாயம் அந்த நள்ளிரவு ஆட்டம்

தன்னை மிக கடுமையாக நடந்து கைது செய்த முத்துகருப்பனை பின் அமைந்த தன் ஆட்சியில் கலைஞர் பழிவாங்கவுமில்லை, கொஞ்சமும் அதை கண்டுகொள்ளவுமில்லை

அதுதான் கலைஞர்

கலைஞரை கைது செய்து அடக்க நினைத்தவர்கள் பின் பெங்களூர் சிறையில் அடைபட்டதும் வரலாறு

அக்கிரமக்காரர்கள் ஆடித்தான் அழிவார்கள் என்பது அச்சம்பவத்தில் உண்மையாயிற்று, ஆடியவர்களும் அடங்கிவிட்டார்கள்.

பின்னாளில் ஜெயா கைது செய்யபட்டபொழுது சோ ராமசாமியிடம் அது பற்றி கேட்டார்கள்

“ஜெயா தண்டனை விதித்தவுடன் அவர் போக்கில் சிறை சென்றார், ஐயோ கொலை பண்றாங்க.. கொலை பண்றாங்க என சத்தமா இட்டார்” என இச்சம்பவத்தை சீண்டினார் சோ ராமசாமி

அவரால் முடிந்தது அவ்வளவுதான்.