உலக கால் பந்து போட்டி : நம்பவே முடியாத ஆச்சரியங்கள்
நம்பவே முடியாத ஆச்சரியங்கள் நடக்கும் உலகிது, பழனிச்சாமி கூட முதல்வராகிவிட்ட நேரமிது
இத்தகைய பேரதிர்ச்சிகள் கால்பந்திலும் நடப்பதில் ஆச்சரியமில்லை, நேற்று அர்ஜென்டினாவும் போர்ச்சுகல்லும் ஒரே நேரத்தில் வெளியேறியது அப்படித்தான்
அர்ஜென்டினாவுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு, ஆட்டத்தில் முதல் கோலை அவர்கள் அடித்தால் வெற்றி நிச்சயம். தவற விட்டால் படுதோல்வி என்பது அது
நேற்றும் அது நிரூபிக்கபட்டதுதான் சோகம், முதல் கோலை பிரான்ஸ் அடிக்க அப்படியே நடந்தது
மெஸ்ஸியின் இடம் மாற்றபட்டது இன்னும் சில சர்ச்சைகள் இருந்தாலும் இந்த உலக கோப்பையினை வெல்லும் தகுதி அர்ஜென்டினாவிற்கு இல்லை என்பதை ஒப்புகொண்டாக வேண்டும்
அந்த பிரான்ஸின் மாப்பா அடித்திருக்கும் இரண்டு கோலும் பீலேவிற்கு பின்னால் இளம் வீரர் அடித்திருக்கும் அற்புத கோல்கள்
உலககோப்பை கனவு தகர்ந்த வேதனையுடன் விடைபெறுகின்றார் மெஸ்ஸி, அடுத்த உலக கோப்பையில் அவர் ஆடுவது நிச்சயம் நடக்காது, வயது ஆகிவிடும்
போர்ச்சுக்கல் அபாரமாக ஆடினாலும் உருகுவேயின் மிக துடிப்பான ஆட்டத்திற்கு முன்னால் நிற்க முடியவில்லை, கலக்கினார்கள்
கிறிஸ்டியானா ரொனால்டோவும் பிரகாசிக்க முடியவில்லை, வந்தாயிற்று, அவர் அடுத்த உலக கோப்பையில் 38 வயது கிழவனாக ஆடுவார் என்கின்றார் பயிற்சியாளர் பார்க்கலாம்
எதிர்பார்க்கபட்ட மெஸ்ஸியும் ரொனால்டோவும் நடையினை கட்டியாயிற்று
உருகுவே அணியின் எழுச்சி அசரடிக்கின்றது. கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அசைக்க முடியாத கால்பந்து அணி
பிபாவிற்கு முந்தைய உலககோப்பை என சொல்லி சில அணிகள் ஆடிய முதல் உலககோப்பையினை அவர்கள்தான் வென்றார்கள்
ஹிட்லர் காலம் வரை உருகுவே பலம் வாய்ந்த அணி, பின்னர் பீலே பிரேசிலை உச்சத்திற்கு கொண்டு சென்றார், மாரடோனா காலத்தில்தான் அர்ஜென்டினா எழும்பியது
உருகுவே 90 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வரலாற்றை திருப்பி கொண்டு மிரட்டுகின்றது
இப்போதைய சூழலில் கோப்பையினை வெல்ல பிரேசில், உருகுவே அணிகளுக்குத்தான் வாய்ப்பு
ஆனாலும் அதிசயம் நிகழ்ந்து குரோஷியா போன்ற அணிகள் தட்டினாலும் தட்டலாம்