கடவுள் நம்பிக்கையினை தாண்டி, மனசாட்சிபடி அரசியல் என்பது இதுதான்
ஈரோடு நகராட்சி தலைவராக பெரியார் இருந்தபொழுது கோவில் கணக்கு அவரிடம்தான் இருந்தது
துளியும் சந்தேகமோ, எதிர் கேள்வியோ வராத வண்ணம் மிக சுத்தமான கணக்கு வழக்குகளை வைத்திருந்தார் பெரியார்
இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை, தன்னை நம்பி ஒப்படைத்த கோவிலின் நிர்வாகத்தை காக்க வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு நிறைந்திருந்தது
தன் பதவிகாலம் முடியுமட்டும் ஒரு குறையினை அவர்மேல் சுமத்தயாராலும் முடியவில்லை.
ஒரு பைசா காணவில்லை என்றோ, ஒரு குண்டுமணி தங்கம் குறைந்தது என்றோ யாராலும் சொல்லமுடியவில்லை. அந்த அளவு நிர்வாகத்தை மிக கறாறாக வைத்திருந்தார்.
கொட்டிகிடந்த ஆலய காணிக்கைக்கும், நகைகளுக்கும் அவரிடம் கணக்கு அப்படியே இருந்தது. கள்ள கணக்கு என பெரியார் மீது ஒரு பிராமணராலும் குற்றம் சொல்லமுடியவில்லை
அந்த நாத்திகனின் மேற்பார்வையில் கூட ஒரு சிலை திருட்டு நடைபெறவில்லை என்பதுதான் வினோதம்
அந்த நாத்திகன் மனசாட்சிக்கு பயப்பட்டிருகின்றான், இங்கோ ஆத்திகன் தெய்வசிலையினை கல், உலோக சிற்பம் என நினைத்து விளையாடியிருக்கின்றான்
மனசாட்சியே கடவுள் என வாழ்ந்த பெரியார் ஆயிரம் ஆத்திகர்களுக்கு முன்மாதிரியாக நிற்கின்றார்
இப்பொழுதும் ஆலய சிலைகளுக்காக நாத்திக திமுகதான் மல்லுகட்டுகின்றதே அன்றி, ஆத்திக பாஜகவும் அதன் அடிமைகளும் மகா அமைதி
ஸ்டாலின் கோவில் குங்குமத்தை தன் நெற்றியில் அழித்தது சர்ச்சையாகலாம், ஆனால் அவரின் சிலை மீட்பு விவகார கேள்விகளில் நியாயமில்லை என யார் சொல்லமுடியும்?
எதற்கெடுத்தாலும் ஸ்டாலினை சீண்டும் பாஜக இவ்விஷயத்தில் அர்ஜென்டினா பயிற்சியாளர் போல தலைமறைமாகும் மர்மம் என்ன?
திமுகவிடம் நியாயமான கேள்விகள் இருக்கின்றன, கேட்கின்றார்கள். அவர்கள் ஆத்திகர்களா? இல்லையா என்பது சிக்கல் அல்ல
கடவுள் நம்பிக்கையினை தாண்டி, மனசாட்சிபடி அரசியல் என்பது இதுதான்