போதகர் திருமணம் செய்தால் என்ன?
போதகர் திருமணம் செய்தால் என்ன? திருமணம் செய்துவிட்டு கிறிஸ்தவ ஊழியம் செய்ய முடியாதா? என கேட்டு பிரிந்தான் மார்ட்டின் லுத்தர்
கிறிஸ்தவ ஊழியகாரனுக்கு குடும்பம் பிள்ளைகள் என வந்தால் என்னாகும் என்பதற்கு இதுதான் சான்று
இதனை சொன்னால் நம்மை ஆர்.எஸ்.எஸ் என்பார்கள், கிறிஸ்தவ எதிரி என்பார்கள்
கிறிஸ்தவ போதகர்கள் குடும்ப ஆதிக்கமும், அந்த புனிதமான சேவை பணம் கொட்டும் தொழிலாகவும் மாறிபோனதே இந்த அடிதடிக்கெல்லாம் காரணம்
இவர்களை விட காசுக்கு ஆசைபட்டு இயேசுவினை காட்டி கொடுத்து பின் குற்ற உணர்வினால் உயிர்விட்ட யூதாஸ் எவ்வளவோ மேலானவன்.