எதையும் தாங்கும் இதயம் வேண்டும் : ஓ.பி.எஸ்

Image may contain: 1 person, text

பன்னீரை நிர்மலா விரட்டியது விஷயம் அல்ல, விரட்டபடுவது பன்னீருக்கு புதிதும் அல்ல‌

ஜெயா அப்படி பன்னீரை குட்டிகரணம் அடிக்க வைத்திருந்தார், சசிகலா கோஷ்டி பன்னீரை காதை திருகி தலைகீழாக தொங்க விட்டிருந்தகாலமும் இருந்தது

மன்னார்குடி குடும்பம் இருமினாலே தலையால் நடந்தவர் பன்னீர்

அவமானத்திற்கே அவமானம் கொடுத்தவர் பன்னீர் என்பது கடந்த வரலாறு

விஷயம் அந்த விரட்டல் அல்ல மாறாக பன்னீரின் சகோதரருக்கு கொடுக்கபட்ட விமான உதவி

பன்னீரின் சகோதரருக்கு உடல்நல தேவைக்காக ராணுவ விமானத்தை நிர்மலா ஒதுக்கினார் என்ற நன்றிகடனுக்குத்தான் அவரை பார்க்க சென்றார் பன்னீர் என செய்திகள் கசிகின்றன‌

இதை இதுவரை நிர்மலா மறுக்கவில்லை

பன்னீரின் சகோதரர் என்ன அரசு பதவியில் இருந்தாரா? இல்லை தேச தியாகியா? ராணுவ வீரனா குறைந்தபட்சம் குப்பையாவது அள்ளினாரா என்றால் இல்லை

பின் எந்த தகுதியில் பன்னீரின் சகோதரரின் சிகிச்சைக்கு ராணுவ விமானம் ஒதுக்கபட்டது?

அப்படி மக்கள்நலம் பேணும் அரசு என்றால் எல்லா சாமானியனையும் ஹெலிகாப்டரில் தூக்கி செல்வார்களா?

இது கண்டிக்கபட வேண்டிய விஷயம், நிர்மலா சீத்தாராமன் விளக்கம் கொடுக்க வேண்டிய விஷயம்

எதிர்கட்சிகள் முறையாக நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் நிர்மலாவிற்கு சிக்கல்தான்

இச்சம்பவத்தை வெளியில் சொன்னவர் பன்னீர், அந்த கோபத்தில்தான், இது வெளியில் தெரிந்தால் சிக்கலாகும் என்ற பயத்தில்தான் பன்னீர் முகத்தில் கதவால் அடித்திருக்கின்றார் நிர்மலா

கிட்டதட்ட மூடனுக்கு உதவிய நிலையில்தான் நிர்மலா சிக்கி இருக்கின்றார், சரியாக அவரை பிடித்து கேட்க இங்கு யாருமில்லை

இப்போதைய சூழலில் டிடிவி தினகரன் கேட்டால்தான் உண்டு


“அண்ணா, எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்…

இதையும் தாங்க ஏது அண்ணா இதயம்?”


Image may contain: one or more people “ஆத்தா நீ சின்னம்மாவ‌ வளர்த்தா, தினகரன வளர்த்தா விவேக்கையும் வளர்த்தா

ஆனா அல்ஷேசியன் நாய்க்கு பதிலா என்னத்தான வளர்த்தா, அது அந்த டெல்லிகாரிக்கு புரியமாட்டேங்குது

நீ இல்லாத இந்த அனாதை அடிமைய ஆளாளுக்கு அடிக்கிறாங்க ஆத்தா, தாங்க முடியல ஆத்தா”

 


Image may contain: one or more peopleஎதையும் தாங்கும் இதயம் வேண்டும், நிர்மலா சீத்தாராமன் சந்திக்க மறுத்தது குறித்து ஓ.பி.எஸ் பேட்டி

இதற்கு எதையும் தாங்கும் இதயம் அல்ல, எதையும் தாங்கும் முதுகும் முகரையும் வேண்டும்

அப்படித்தான் செவிட்டில் அடித்தது, முதுகில் மிதித்து தள்ளியது போல தள்ளி இருக்கின்றார் நிர்மலா, அன்னார் ஏதோ அண்ணா பாணியில் ஆறுதல் அடைகின்றாராம்.

திமுக இம்மாதிரி அவமானங்களை சந்தித்தால் இதுதான் “ஆரிய திமிர், பார்ப்பன அதிகாரம், பெரியாரின் செருப்பே இதற்கு பதில், அடலேறே களம் காண்பாய் , களங்கம் துடைப்பாய்” என்றெல்லாம் நிலமையினையே மாற்றி போட்டு அரசியல் செய்யும்

ஆனால் பிராமணர் ஜெயலலிதா முன் குனிந்து நின்ற பன்னீர் இப்படி எல்லாம் எப்படி சொல்ல முடியும்?

கலைஞர் நலமாய் இருந்தால் பன்னீரை எப்படி கலாய்ப்பார் தெரியுமா?

“அண்ணா சொன்னது இதயம் உள்ளவர்களுக்கு, இதயமே இல்லாதவர்கள் இதயம் இல்லாதவர்களுக்கு சுயமரியாதை ஏது? மானம் ஏது? “