முன்னனியில் இம்ரான்கான்
பாகிஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கின்றார் இம்ரான்கான்
இது இந்தியாவில் எப்படி எதிரொலிக்குமோ தெரியாது, இங்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கு இனி அரசியல் ஆசை ஊற்றெடுக்கலாம்,
டோனியினை பலர் சீண்டலாம், ஏன் கோலி கூட மோடிக்கு அரசியல் சேலன்ஞ் விடலாம்
ஆயினும் மனோஜ் பிரபாகர், சித்து போன்ற சூடுபட்ட கிரிக்கெட் வீரர்களும் உண்டு
ஒருவேளை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரமராகிவிட்டால் என்னாகும்?
நமது பிரதமர் பிட்னெஸ் சேலஞ்ச் விடாமல் இருப்பாரா?
பாகிஸ்தானில் இம்ரான்கான் முன்னணி எனும் நிலையில் வாக்கு மெஷினில் கோளாறு, தொழில் நுட்ப கோளாறு என சர்ச்சைகள் வருகின்றன
இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவு தள்ளிபோடபட்டிருக்கின்றது
நாவஸையும், இம்ரான்கானையும் ஓரமாக விளையாட சொல்லிவிட்டு ராணுவம் ஆட்சியினை கைபற்றவும் வாய்ப்பு இருக்கின்றது