போலிசாமியார்களுக்கு நடக்கும் முடிவு இது
ரஷ்யாவின் ரஸ்புட்டீன் போல உலகெல்லாம் ஒவ்வொரு நாட்டையும் கெடுக்க ஒவ்வொரு சாமியார்கள் வருவார்கள், ஆடுவார்கள் ஒரு கட்டத்தில் அவர்களின் போலிதனம் வெளிவந்து மக்களே அவர்களை அடித்து கொல்வார்கள்
உலகெல்லாம் நடக்கும் நிகழ்வு இது, போலிசாமியார்களுக்கு நடக்கும் முடிவு இது. நமது ஊர் பிரேமானந்தா அப்படி செத்தார், நித்தியும் ஜக்கியும் பின்னாளில் சிக்குவார்கள்
இப்படிபட்ட போலிசாமிகளுக்கு ஜப்பானும் விதிவிலக்கு அல்ல, அங்கும் ஒரு வெள்ளை தக்காளி சாமி உருவானது அவர் பெயர் ஷோகோ அசஹாரா
மனிதர் முதலில் வெட்டியாக இருந்தார், வெட்டியாக இருந்தால்தானே புத்திகெடும்? கெட்டால் சாமியாராவர்கள்
அப்படி இந்த சாமியும் உருவானது, இந்து மதத்தையும் புத்தமதத்தையும் கலந்து ஓம் ஷின்ரிக்யோ என்ற இயக்கம் தொடங்கினார்
பொதுவாக ஜப்பானியர்கள் சுறுசுறுப்பானர்கள் கடும் உழைப்பாளிகள், கோவில் குளம் எல்லாம் அவர்களுக்கு எப்பொழுதுதான் நினைவுக்கு வரும்
ஆனால் தியானம் உடற்பயிற்சி போன்றவற்றில் கருத்தாய் இருப்பார்கள், அதில் புகுந்து குழந்தாய் நானே கடவுளின் மகன் என சொல்லி புகுந்தது இந்த வெள்ளை பணியாரம்
யோகா போன்றுதான் தொடங்கினார், போக போக தான் அவதாரம் என சொல்லிகொண்டார்
1980களில் ஒரு தீர்த்தம் கொடுக்க ஆரம்பித்தார், அது கஞ்சா போன்ற போதை திரவம், அதில் பக்தர் கூட்டம் சொக்க ஆரம்பித்தது
எப்படியோ ஜப்பானியர்களை நம்ப வைத்து தான் அவதாரம் என அவர்களை பின்பற்ற செய்தார்
காணிக்கை கொட்டியது , இந்த பூசனிசாமியின் தாடி முடி கூட பல்லாயிரம் டாலருக்கு விற்படும் அளவு அவரின் சாம்ராஜ்யம் பரந்து விரிந்தது
பதஞ்சலி பொருட்கள் போல இந்த வெள்ளை பூண்டு சாமியன் உற்பத்தியும் ஜப்பானில் சக்கை போடு போட்டது, சாமி குளித்த நீரின் துளி சில லட்சங்களுக்கு போனது
நான் மகான், நீங்கள் என்னால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் என சொல்லிகொண்டிருந்தாலும் உள்ளே இருந்த மிருகம் விழித்தது
வெளியே சாமி என சொல்லிகொண்டாலும், சாமியின் உள்மனது ஆளபிறந்தவன் என சொல்லிகொண்டது
ஜப்பானியர் மனதில் அடங்கி இருந்த போர்வெறியினை தூண்டிவிட்டார், அமெரிக்கா விரைவில் தாக்க இருப்பதாகவும் ஜப்பானை தானே காப்பாற்ற இருப்பதாகவும் போதிக்க தொடங்கினார்
தன்னிடம் இருந்த மில்லியன் டாலர் காணிக்கை பணத்தில் ஒரு ராணுவமும் அமைத்து கொண்டார், இதில் ஆச்சரியம் என்னவென்றால் எல்லாம் ரகசியம்
ஒரு கட்டத்தில் தன் சீடர்களை தவிர தன்னை ஏற்காத ஜப்பானியரை கொல்ல போவதாகவும் ஜப்பான் மன்னரை அகற்றிவிட்டு முடிசூடி அமெரிக்காவினை கைபற்றபோவதாகவும் சொல்லிகொண்டார்
ஜக்கி சீடர்கள், நித்தி அடிமைகள், ராம்தேவ் ரசிகர்கள், மோடி முரட்டு பக்தர்கள் போல அதையும் சாமியின் கூட்டம் நம்பியது
ஜப்பானில் குண்டுகள் வெடிக்க தொடங்கின, குழப்பம் கூடியது ஜப்பான் அரசு தலையினை பிய்த்து கொண்டிருந்தது
இந்நிலையில்தான் 1995களில் நச்சுவாயு தாக்குதல்கள் தொடங்கின, பலர் பலியாக தொடங்கினர்
விழித்துகொண்ட ஜப்பான் அரசு தன் இரும்பு கரங்களைநீட்டி சாமியினை தூக்கியது, அவரின் ஆசிரமம் காலி
ஆனால் விசாரணையில் அவர் அரைலூசா இல்லை பெரும் திட்டத்துடன் சாமியார் வேடத்தில் இருந்த தீவிரவாதியா என குழம்பியது ஜப்பான்
காரணம் அவரின் திட்டங்களும் அவர் சேர்த்து வைத்திருந்த கிறுக்கு கூட்டமும் அவ்வளவு கொடூரமானவை
எனினும் சாமி சிக்கியபின் காக்கைகள் பறந்தன, ஒரு சிலமட்டும் சாமியோடு சாக தயாராயின
அவர்களுக்கான தூக்கு நேற்று நிறைவேற்றபட்டது, 12 பேர் சாமியாரோடு பரலோகம் அனுப்பபட்டாயிற்று
எனினும் சாமி மறுபிறவி எடுத்து வந்து அமெரிக்காவினை அடிக்கும் , பழிவாங்கும் என அவரின் ரகசிய சீடர்கள் நம்பி கொண்டிருக்கின்றனர்
இந்த திடீர் கார்பரேட் சாமிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதற்கு இந்த ஷோகோ அசஹாரா பெரும் எடுத்துகாட்டு
இந்தியாவிலும் பல போலிசாமிகள் உண்டு, சில சிக்குகின்றன, சில பிரதமரோடு ஆளுநரோடும் ஆடிகொண்டிருக்கின்றன
இவைகளிடம் மகா கவனமாக இருப்பது மக்களுக்கு நல்லது, இல்லாவிட்டால் ஜப்பானுக்கே அச்சுறுத்தலான ஷோகோ அசஹாரா போல இவர்களும் ஒரு காலத்தில் இங்கு அச்சுறுத்தலாவார்கள்