கலைஞர் என்பவர் கலங்கரை விளக்கம்

Image may contain: 1 person, smiling, sunglassesஅந்த மனிதனிடமிருந்து அவன் விளக்கை பிடுங்கினார்கள், அவன் இருட்டிலும் சரியாக நடந்தான்

ஆத்திரத்தில் அவன் கைதடியினை பிடுங்கினார்கள் அவனோ அச்சமின்றி தானாக நடந்தான்

இன்னுமா பயணிக்கின்றான் என வழியில் பாம்பினை விட்டார்கள், கடும் தேளினை விட்டார்கள் அவனோ ஒதுங்கி நடந்தான்

அவன் பாதையில் கடும் நெருப்பினை இட்டார்கள் தாண்டி நடந்தான்

அவன் சென்ற பாதையின் கைகாட்டியினை திருப்பி வைத்துவிட்டு இதோ பாதை மாதை செல்கின்றான் என பரிகாசம் செய்தார்கள், அவனோ சரியான திசையில் நடந்தான்

எந்த சூழ்ச்சியும் அவனின் பாதையினை மாற்றமுடியவில்லை, எந்த சக்தியும் அவனை தடுக்க முடியவில்லை

85 வருடமாக இப்படி நடந்தவனின் பாதங்கள் களைத்துவிட்ட நிலையில் இனி சாகபோகின்றான் என மறுபடியும் பரிகாசம் செய்கின்றார்கள்

அவன் அவனின் அண்ணனின் இதயத்தை இரவல்தான் பெற்றான், நேரம் வந்தால் கொடுத்துத்தான் தீரவேண்டும்

அவன் பகுத்தறிவாளன் சந்தேகமில்லை ஆனால் காலகணக்க்கு அவனுக்கும் உண்டு.

ஆனால் வரலாற்றில் அவனின் இடம் என்ன? அது மகத்தானது. இனி ஒருவன் எட்ட முடியாதது

கலைஞர் என்பவர் அணைகட்டு, கால காலத்திற்கு அந்த அணை வாழ்வளிக்கும்

கலைஞர் என்பவர் படிகட்டு, கால காலத்திற்கு மக்களை உயர செல்ல வைக்கும்

கலைஞர் என்பவர் கைகாட்டி, அது எந்நாளும் சரியான பாதையினை காட்டி கொண்டே இருக்கும்

கலைஞர் என்பவர் பல்கலைகழகம், அனுதினமும் ஏதாவது ஒரு பாடத்தை அது வருங்கால தலைமுறைக்கு நடத்திகொண்டே இருக்கும்

கலைஞர் என்பவர் கலங்கரை விளக்கம், எல்லா படகுகளுகும் கப்பல்களுக்கும் வழிகாட்டி கொண்டே இருக்கும்

யாரெல்லாம் அவன் சாய்ந்து கிடக்கும் காட்சியினை காண தவமிருந்தார்களோ அவர்கள் எல்லாம் போய்விட்ட நிலையில் அதனை சிரித்து கொண்டே ஏற்றுகொண்டு

யாரெல்லாம் அவரை பரிகாசித்தார்களோ அவர்களை நோக்கி ஒரு காலத்தில் என்னை புரிந்துகொள்வீர்கள் என மவுனமாக சொல்லியபடி காவேரி மருத்துவமனையில் சரிந்து கிடக்கின்றான் அந்த மாமனிதன்


Image may contain: 1 personவாழை மரங்களை பார்க்கும்பொழுதெல்லாம் என் தந்தையின் நினைவு வருவது போல, பத்திரிகைகள்

செய்திதாள்கள் அரசியல் மேடைகள் , பத்திரிகையாளர்களை காணும்பொழுதெல்லாம் அந்த மனிதனின் நினைவே வந்து நிற்கின்றது

ஒருமுறை வந்துவிடய்யா உன் கைகளை பற்றிகொண்டு உன் உச்சந்தலையில் முத்தமிடும் நன்றிகடன் பாக்கி இருக்கின்றது

எந்த வகையிலும் எங்களை ஏமாற்றாத‌ நீர், இம்முறையும் ஏமாற்றமாட்டீர் என்ற நம்பிக்கையுடன் கண்களை துடைத்து கொள்கின்றோம்


பிரபாகரனின் தாயினை பராமரிக்கும் கடமை பார்வதியம்மாளின் இதர பிள்ளைகளான மனோகரன், வினோதினி போன்றவருக்கு கிடையாதாம்

கடனாவிலும் அமெரிக்காவிலும் வசிக்கும் அவர்கள் பார்வதி அம்மாளை அதாவது பெற்ற தாயினை பார்க்க மாட்டார்களாம், கலைஞர்தான் பார்க்க வேண்டுமாம்

ஈழமக்களின் சாவினை தடுக்கும் பொறுப்பு கலைஞருக்கு மட்டும் உண்டாம் , பிரபாகரன் என்பருக்கு கிடையவே கிடையாதாம்

அவர் லட்சுமண் கதிகாமரை கொல்வார், சரத் பொன்சேகா கோத்தபாயாவிற்கு எல்லாம் மனிதவெடிகுண்டு அனுப்பி சிங்களனுடன் சண்டைக்கு தயார் என சொல்லிகொண்டே இருப்பாராம்

ஆனால் ஈழமக்களை கருணாநிதிதான் காக்க வேண்டுமாம்

இதெல்லாம் என்னவகை நியாயம் என்றே தெரியவில்லை..


எவண்டா அவன்? நேற்று இரெவெல்லாம் அண்ணா சமாதி பக்கம் குழிதோண்டியது, மரியாதையாக அதில் போய் படுத்துகொள்

இல்லாவிட்டால் உன்னை இழுத்து வந்து போட்டு மூடிவிடுவோம்..