தமிழகத்தை காப்பதே கலைஞருக்கு காட்டும் நன்றிகடன்

Image may contain: 1 person, crowd and outdoor

திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைமுன் குவிந்து கிடப்பதும், காவல்துறை கட்டுபடுத்த திணறுவதும், திமுக தலமை தொண்டர்களை கலைந்து போக சொல்வதும் நேற்றிரவு முழுக்க நடக்கும் விஷயங்கள்

இதில் ஆங்காங்கே தமிழகம் முழுக்க கலைஞரை எண்ணி சிலர் மாரடைப்பில் சாவதாகவும் தகவல்கள்

இந்த தொண்டர்களுகு எல்லாம் நாம் சொல்லிகொள்வது ஒன்றுதான்

கலைஞர் ஒன்றும் சாகாவரம் பெற்றவர் அல்ல, பெரியார் போல அண்ணா போல அவருக்கும் எல்லை கோடு உண்டு

அவர் சிறையில் இருந்தால் நாமெல்லாம் உடைத்து மீட்கலாம், ஆனால் திரும்ப முடியாத கோட்டை கதவின் வாசலில் அவர் நிற்கும் பொழுது நாம் என்ன செய்துவிட முடியும்?

தன் நீண்ட ஆயுளில் அவன் யாருக்கு குறை வைத்தார்?

நாமெல்லாம் காலம் காலமாக நடக்க வழிகாட்டி விட்டார்ன், செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்துவிட்டார்

இனி நாம் செய்யவேண்டிய விஷயங்களுக்கு அஸ்திவாரமும் போட்டுவிட்டார், அதில் கோபுரம் கட்டவேண்டியது நம் பொறுப்பு

தன் வாழ்நாளெல்லாம் எளிமையினை கடைபிடித்த அவர், தன்னால் தன்பெயரால் தமிழக அமைதி விரும்புவதை துளியும் விரும்பமாட்டார்

அம்மனிதனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றால் அமைதி வழியில் மனதில் கண்ணீர் வடித்தபடி வருவதை எதிர்கொள்வோம்

கலைஞர் இன்றா படுக்கையில் வீழ்ந்தார் என நினைக்கின்றீர்கள்?

கஷ்ட‌பபட்டு பெரியாரும் அண்ணாவும் அவரும் உருவாக்கிய திராவிட அரண்மனையின் ஒருபாதி பிரிக்கபட்டு அதில் பிராமண ஜெயலலிதா தலைவர் ஆகும்பொழுதே அவர் மனம் உடைந்தது

பெரியார் வழியில் வந்த கட்சியில் பிராமண ஆதிக்கம் என்பது அவரை மனதால் கதறவைத்தது, அவர் நெஞ்சில் விழுந்த வடு அது

அப்படி ஒரு வலுவான எதிரி இனி உருவாகாத அளவு தமிழகத்தை காப்பதே கலைஞருக்கு காட்டும் நன்றிகடன்

அதற்கு தயாராகுங்கள்

கண்ணீரை துடையுங்கள், வரும் நிகழ்வுகளை எல்லாம் கலைஞருக்கு நன்றிகாட்டும் விதமாக அமைதியாக எதிர்கொள்வோம்


Image may contain: one or more people, people sitting and beardகலைஞர் என்ன கிழித்தார் என சிலர் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், அவர்களுக்கு 1972லே பெரியார் பதில் சொல்லி இருக்கின்றார் இப்படி

“இன்றைய தேதியில் மத்திய சர்க்கார் அதிகாரம் இல்லாத மாநில சர்கார் பணியாளர்களிலும் உயரதிகாரிகளிலும் 70% பிரமாணன் அல்லாவதர்கள்

இது பலநூறு ஆண்டுகள், ஏன் ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நடக்காத விஷயம். பல நூறு ஆண்டுகளாக‌ அதிகாரம் அவர்கள் பிராமணர் கையில் இருந்தது

அதை மீட்டெடுத்தது திமுக அரசு என்பதில் பெருமை அடைகின்றேன், கருணாநிதி அரசுக்கு வலுசேர்க்கும் அவசியமும் கடமையும் நம் எல்லோருக்கும் இருக்கின்றது”

1972ல் நிலமை இப்படி இருக்க, 2018ல் எப்படி இருக்க்கின்றது என அறிவுள்ளவன் சிந்திப்பான்

அறிவே இல்லாத நாம் தும்பிகள் கூட்டம் எப்படி சிந்திக்கும்? எள் முனை அளவேனும் அறிவிருந்தால் அவை தும்பிகளாகுமா?