கலைஞரை தும்பிக்கு அடுத்து சீண்டுபவர்கள்….

 

Image may contain: 8 people

கலைஞரை தும்பிக்கு அடுத்து சீண்டுபவர்கள், அவரை வசைமாறி பொழிபவர்கள் யாரென கண்டால் பிராமணர்கள்

 

அதில் காரணமும் இல்லாமல் இல்லை. பாதிக்கபட்டவர்கள் அவர்கள்தான் கத்தத்தான் செய்வார்கள்

ஆனால் ஒரு நன்றியினை மறக்கின்றார்கள்

அதாவது நீதிகட்சி பிராமணருக்கு எதிராக தொடங்கபட்டு பின் பெரியார் காலத்தில் சுயமரியாதை கழகமாக பிரிக்கபட்டு பின் திராவிட கழகமாகி பின் திமுக ஆனது

அந்த திமுக ஆட்சிக்கு வந்தபின்பு இட ஒதுக்கீடு முதல் பல விஷயங்கள் சட்டமாக்கபட்டு பிராமணர்கள் விரட்டபட்டனர், நடந்த வரலாறு இது

நீதி கட்சியின் வாரிசாக திராவிட கழகமும், திராவிட கழகத்தின் வாளாக திமுகவும் களத்தில் 100 ஆண்டுகளாக கடும் சவாலை பிராமர்க்கு கொடுத்தன‌

ஆனால் இனி?

ஒன்றுமில்லை, பெரியாரின் வாரிசான கலைஞரோ கடைசி தருணத்தில் இருக்கும்பொழுது இனி அப்படிபட்ட போர்குணமிக்க தலைவர்கள் இல்லை

காரணம் என்ன?

அண்ணாவின் காலத்தில் பெரும் கொள்கை படை இருந்தது, கலைஞர் பதவிக்கு வந்ததும் அவர்கள் எல்லாம் ஒதுங்கினர் அல்லது ஒதுக்கபட்டனர்

பின் கலைஞரின் துதிபாடிகளால் கட்சி நிரம்பியது, போர்முழக்கம் கேட்ட கட்சி துதிபாடல்கள், தோத்திர பாடல்களால் நிரம்பியது

வாளந்திய கைகள் எல்லாம் சாமரம் வீசி வணங்கி நின்றன‌

பெரும் போர்க்குணம் கொண்ட கட்சியின் நீட்சியான திமுக ஒருபக்கம் ராமசந்திரன் வகையறாவில் அழிந்தது

இன்னொரு பக்கம் கலைஞர் எனும் அசாத்திய மனிதர் கொண்டு சென்றாலும், தனக்கு பின் கொள்கை பிடிப்புள்ள தலைவனை உருவாக்க அவர் தவறிவிட்டார்

கட்சி, ஆட்சி என்ற கணக்குகளிலே அவர் இருந்ததால் கொள்கை என்பது கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது

அண்ணா, மதியழகன், நடராசன், நெடுஞ்செழியன் என பெரும் கொள்கையாளர் வரிசை இருந்தது. அவர்களோ அவரிகளின் வாரிசுகளோ இல்லை கொள்கை தலைவர்களோ உருவானார்களா?

இல்லை, கலைஞர் எனும் சொல் எல்லாவற்றையும் அடக்கிற்று, அவர் ஒருவர் மட்டும் தெரிந்தார். அவரும் இனி விடைபெறுவார் என்றால் என்னாகும்?

இனி முற்றும் விடைபெற போகின்றது

ஆக பிராமண கணவான்களே, கலைஞரும் வேறு எந்த தலைவரும் உருவாகி வராதவாறு காவல்காத்து விட்டு ஒருவரும் இனி இல்லை என உறுதிபடுத்திவிட்டே செல்கின்றார்

இனி உங்களுக்கு சவால் கொடுக்க யாருமில்லை.

உங்களுக்கு எதிரான பெரும் போராட்ட நீட்சி ஒன்று கலைஞர் எனும் மனிதனுடன் விடைபெறுகின்றது.

எல்லா சாதிக்கும் உதவிய அம்மனிதன் உங்களுக்கும் ரகசியமாக உதவி செய்துவிட்டே செல்கின்றான்

அவ்வகையில் அவருக்கு நன்றி கூறுங்கள்,

இனியாவது அவர் காது குளிர நன்றி சொல்லி அனுப்பி வையுங்கள்