கலைஞரை நேரில் சந்தித்தனர் பழனிச்சாமி பன்னீர்

Image may contain: 1 person, close-up

என்னது கருணாநிதியா? இங்கேயா?

வேண்டாம் கடவுளே வேண்டாம்..

பெரியார் அண்ணா இப்படி ஆளாளுக்கு போட்டு அடிச்சாங்க,

அப்புறம் வந்தவங்க‌ ஆளாளுக்கு அடிச்சாங்க, ஜாணகி கணவன் கணபதி எல்லாம் நெஞ்சிலே மிதிச்சார்

கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறதுக்குள்ள அம்மு வேற வந்து போட்டு அடிக்குது

இதில அவர் வேறயா?..வந்துட்டா நான் தாங்குவேனா..

அவர் வரவே வேண்டாம், இல்லாவிட்டால் இன்னும் 10 வருஷமாவது பொறுத்துவரட்டும்


அரசியலில் எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது – கமல்ஹாசன்

அட ஆண்டவரே, இவ்வளவு நாளும் எதிரி யார் என தெரியாமலா கம்பு சுத்தி கொண்டிருந்தீர்????

கலைஞர் நலமில்லாது இருக்கும் நேரத்தில் நீர் எதிரியினை காட்டும் நேரம் வந்துவிட்டது என்றால் உம் எதிரி முக ஸ்டாலினா?


Image may contain: 3 people, people smilingகலைஞரை நேரில் சந்தித்தனர் பழனிச்சாமி பன்னீர் : செய்தி

“பங்கு, நம்ம கட்சி தலைவினை கடைசி வரை பார்க்கமுடியாத நமக்கு, எதிர்கட்சி தலைவரை பார்க்க முடிகின்றது என்றால் என்ன அர்த்தம்?

அந்தம்மா நம்மை மனிதர்களாகவே மதிக்கவில்லை என அர்த்தம்..”


கலைஞர் அசைவற்று படுத்திருக்கிறார், அதிர்ச்சி தாங்க முடியவில்லை – நாஞ்சில் சம்பத்

இவரை பார்ப்பதை தவிர்க்க அவர் அசைவற்று படுத்திருக்கும் வாய்ப்பு மிக அதிகம்.


கலைஞர் ஆரம்பித்த அர்ச்சகர் பள்ளியில் இருந்து வந்த பிராமணர் அல்லாதவர் மதுரை கோவிலில் அர்ச்சகராக சேர்க்கபட்டார் : செய்தி

கலைஞர் ஏன் முக முத்து, அழகிரி, ஸ்டாலின், தமிழரசு போன்றவர்களையோ இல்லை உதயநிதி, அறிவுநிதி போன்றவர்களை எல்லாம் அர்ச்சகராக்கவில்லை என யாரும் கேட்க கூடாது

அது பகுத்தறிவு, இருக்கட்டும்

விரைவில் நாங்கள் கட்டபோகும் குஷ்பு கோவிலில் கூட பிராமணர் அல்லாத அர்ச்சகர் அவர்கள்தான் இடம்பெற போகின்றார் என்பதை சங்கம் குறிப்பிட்டு சொல்லிகொள்கின்றது


கலைஞரை ரஜினி இன்னும் சந்திக்கவில்லை என பலர் கிளம்புகின்றார்கள்

காலா படத்தில் ரஞ்சித் என்பவன் அடித்த அடியில் அவரே ஏதோ ஒரு மருத்துவமனையின் மூலையில்தான் கிடப்பார்

இனி கலைஞர் எழுந்துதான் அவரை பார்க்க செல்ல வேண்டும்