சீமான் கலைஞரை சந்திக்க வந்தால் விட கூடாது : உடன் பிறப்புக்கள் ஆவேசம்
சீமான் கலைஞரை சந்திக்க வந்தால் விட கூடாது : உடன் பிறப்புக்கள் ஆவேசம்
இவை உடன்பிறப்பா இல்லை பிறந்தவுடன் மூளை கழற்றி வைத்த கும்பலா என தெரியவில்லை
கலைஞரின் நெஞ்சில் பாய்ந்த கடா வைகோ, அவரால் கலைஞர் பட்ட அவமானமும் வலியும் கொஞ்சமல்ல, கோடாரியால் கலைஞரை பிளந்தது போன்றது அவரின் செயல்
வைகோ எனும் சனியன் பிரிந்தபின் என்ன செய்தது? ஒவ்வொரு தேர்தலிலும் திமுக ஆட்சிக்கு வராதாபடி உள்ளடி வேலை பார்த்தது
கலைஞர் முதல்வராவதை தடுத்தவன் நான் என பகிரங்கமாக சொன்னவர் வைகோ
சுருக்கமாக சொன்னால் சீமான் தன்னை எதிரி என சொல்லிகொண்டவர், வைகோவோ உடனே இருந்த துரோகி
இன்று ஜெயாவும் பிரபாகரனும் இல்லை என்ற பரிதாப நிலையில் வாலை ஆட்டியபடி அறிவாலய வாசலில் நிற்கின்றார், நிச்சயம் மனமெல்லாம் விஷம் இருக்கும்
அவரை அனுமதித்துவிட்டு சீமானை தடுப்பது என்பது மானம் கெட்ட, அறிவு கெட்ட செயல்
எனக்கெனமோ நேற்று பிரசன்னாவிற்கு அழகிரி விட்ட அடி வைகோவிற்கு மறைமுகமாக இட்ட அடி, திமுகவில் மானமுள்ள ஒருவன் உண்டென்றால் அது அழகிரி ஒருவர்தான்
சீமானை வரவேண்டாம் என சொல்ல உபிக்களுக்கு உரிமை உண்டு ஆனால் அதற்கு முன் வைகோ முதுகில் 4 போட்டு வெளியே அனுப்பிட்டு தடுத்தால் வரவேற்கலாம்