இந்திய குடியுரிமை கொண்டவர்கள்
அசாம் எல்லைபுற மாகாணம், வங்க தேசம் பர்மா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக வந்து தங்க வசதியான இடம்
இப்பிரச்சினை நெடுநாளாக நடந்தது, கலவரங்கள் கூட நடந்தன
இப்பொழுது சிக்கலை தீர்க்கும் விதமாக மக்களை அடையாளபடுத்தும் பொருட்டு பதிவு செய்ய சொல்லிவிட்டது அரசு
பதிவென்றால் இந்திய குடியுரிமை கொண்டவர்கள்தானே பதிய முடியும், அப்படி கிட்டதட்ட 40 லட்சம் பேர் பதியமுடியவில்லை
அவர்கள் இந்தியர் அல்ல என்பது முடிவாயிற்று, விஷயம் பாராளுமன்றம் வரை எதிரொலிக்கின்றது
உரிய ஆவணம் இல்லாதவர்களை பெற சொல்லி அவகாசம் கொடுத்திருந்தும் அவர்களால் பெறமுடியவில்லை என்பதால் 40 லட்சம் பேர் சட்டவிரோதமாகவா குடியிருகின்றார்கள் என்ற பெரும் சர்ச்சை வெடிக்கின்றது
இவர்கள் யார்? திருப்பி அனுப்பபடுவார்களா? இந்தியா பராமரிக்குமா என ஏகபட்ட கேள்விகள்
(உங்களுக்கு நாங்கள் குடியுரிமை கொடுத்தால் எங்களுக்கு வாக்களிப்பீர்களா? எனும் சில்லறை அரசியலும் ஆங்காங்கு நடப்பதாக செய்திகள்)
அசாமிலே இப்படி என்றால் காஷ்மீர் போன்ற எல்லை மாகாணம், இன்னும் பல மாகாணங்களில் எவ்வளவு பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பார்களோ என்ற கலக்கம் அரசுக்கு ஏற்பட்டாயிற்று
ஆக ஒழுங்காக கணக்கெடுக்கபடும் பட்சத்தில் இந்திய மக்கள் தொகை 100 கோடிக்கு கீழேதான் வரும் போலும்
எந்த நாட்டு மக்களை எல்லாமோ சேர்த்துகொண்டு உலகின் இரண்டாம் மக்கள்தொகை கொண்ட நாடு என நாமே சொல்லிகொண்டிருக்கின்றோம்