பிராமணர் அல்லாத அர்ச்சகர் வர வேண்டும் என்பது பெரியாரின் கணவு
பிராமணர் அல்லாத அர்ச்சகர் வர வேண்டும் என்பது பெரியாரின் கணவு
அண்ணாவின் திட்டம் , கலைஞரின் செயலாக்கம்
ஆனால் அது நடந்திருப்பது பழனிச்சாமியின் ஆட்சியில் என்பதுதான் ஆச்சரியம்
திசைமாறி போனாலும் அதிமுக ஒரு திராவிட கட்சி என்பதை நிரூபித்துவிட்டது என அவர்கள் சொல்லிகொள்ளலாம்
பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர் ஆவது நிச்சயம் பெரும் விஷயம், பல்லாயிரம் ஆண்டுகளில் முதன் முதலாக நடக்கும் ஆச்சரியம்
இதுதான் புரட்சி
நிச்சயம் பெரும் விஷயமாக கொண்டாடபட வேண்டிய, பெரும் ஆரவாரத்தோடு அறிவிக்கபட வேண்டியதை பழனிச்சாமி அரசு சோற்றுக்குள் முட்டை போல மறைத்து வைக்கின்றது
ஏன் என்றால் விஷயத்தை பெரிதாக்கினால் அது கலைஞருக்கு பெருமை சேர்ப்பது என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்?
1969 முதல், பெண் சொத்துரிமை, வள்ளுவர் கோட்டம் என ஏராளான திட்டங்களை அறிவிப்பார் கலைஞர் ஆனால் அது எல்லாம் நடைமுறைக்கு வருவது இன்னொரு ஆட்சியாக இருக்கும்
அதற்காக கலைஞர் துளியும் வருந்தியதுமில்லை, இது என் திட்டம் என சொல்லிகொண்டதுமில்லை
திராவிட கட்சிகளின் ஆட்சியினை கூர்ந்து பார்த்தால் அதிமுக எனும் கட்சிக்கு ஒரு நாளும் சுயசிந்தனை இருந்ததில்லை கலைஞரின் திட்டங்களை காப்பி அடித்தே ஆட்சி செய்த இயக்கம் அது
இதெல்லாம் செய்யும் பழனிச்சாமி அரசு, கலைஞரின் கனவான புதிய சட்டமன்ற கட்டிடத்தில் சட்டமன்றத்தை இயக்கலாம்
அந்த கலைஞரின் கனவு நூலகத்தையும் நல்ல முறையில் பராமரிக்கலாம்
ஜெயா செய்த திமிர் பிடித்த அராஜக அட்டகாசங்களுக்கெல்லாம் அவரிடம் அடங்கி இருந்து அதை பார்த்துகொண்டிருந்த பழனிசாமி பரிகாரங்களை தேடட்டும்