கலைஞர் : உடலாலும் பலருக்கு அதிசயமே
10 வருடங்களுக்கு முன்பு கலைஞருக்கு முதுகு தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது, வயது 80 தாண்டி இருந்ததால் பலத்த கவனமாக அந்த சிகிச்சை நடந்தது
வயதால் முதிர்ந்தவர் எப்படி வலியினை எதிர்கொள்ள போகின்றாரோ என அஞ்சியபடியே மருத்துவகுழு அவர் கண்விழித்தவுடன் எதிர்கொண்டது
“அவ்வளவுதானா? முடிந்ததா? எப்பொழுது நான் கிளம்பலாம்..” என அசால்ட்டாக கேட்ட கலைஞரை மகா அதிசயமாக பார்த்தது அந்த மருத்துவ குழு
டைனோசரை பார்த்தது போல பார்த்தார்கள்
மனிதர் உடலாலும் பலருக்கு அதிசயமே
அந்த நேரத்தில் ஒரு மருத்துவர் கேட்டாராம் “வலி எப்படி இருக்கின்றது”
கலைஞர் சொன்னார் “அம்மா என அலற வேண்டு போலிருக்கின்றது, ஆனால் என் நிலமையில் அப்படி அலறமுடியாது”
அது அம்மா என ஜெயாவினை அவர்கள் வணங்கி கொண்டிருந்த நேரம்..
அந்த வலியினையும் அந்த இறுக்கமான சூழலையும் தன் சாதுர்யத்தால் சிரிப்பொலியாக மாற்றி கடந்து சென்றவர் கலைஞர்
கருணாநிதி சிகிச்சை விவரம் வெளியாவதில் தாமதம்: காரைக்காலில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு
இதற்கு நிச்சயம் அறிவாலயத்தில்தான் தண்டம் வசூலிக்க வேண்டும், செய்வாரா பழனிச்சாமி??