கலைஞரை சந்திக்க வருகின்றார் ராகுல் காந்தி

கலைஞரை சந்திக்க வருகின்றார் ராகுல் காந்தி

நேரு சுதந்திரத்திற்கு பாடுபட்ட காலத்திலே அரசியலுக்கு வந்தார் கலைஞர், பின்னாளில் நேருவினை பகிரங்கமாக எதிர்த்தார்

அதுவும் திமுகவினரை நேரு “நான்சென்ஸ்” என்றபொழுது, உமக்கு “நோ சென்ஸ்” என கலைஞர் சீற, இந்தியாவே கலைஞரை உற்று நோக்கியது

சர்வ சக்தி படைத்த, யாரும் எதிர்க்க பயந்த நேருவினை துணிந்து அன்றே எதிர்த்தவர் கருணாநிதி

ஆயினும் சீனபோரை தொடர்ந்து திமுக திராவிட நாடு கோரிக்கையினை கைவிட்டபொழுது, நேருவுக்கும் திமுகவிற்கும் புரிந்துணர்வு வந்தது.

அன்று இந்திராவினை விட ராஜிவின் தந்தை பெரோஸ் காந்தே மீது கலைஞருக்கு அபிமானம் இருந்தது, இன்றுள்ள சில சிறப்பு சட்டங்கள் வர பெரோஸ்காந்திதான் காரணம்

பத்திரிகை தொடர்பான சட்டங்கள் அவை.

இந்திராவினை எதிர்ப்பதும் , ராஜதந்திரமாக பின் வாங்குவதுமாக அவர் அரசியல் நடந்தது

ராஜிவ் கலைஞரை எதிரியாக கருதி ஜெயாவிடம் கூட்டணி வைக்க, கலைஞருக்கும் ராஜிவிற்கும் கூட்டணி வாய்ப்பின்றி போனது

ஈழவிவகாரங்களில் கலைஞரின் ஆலோசனையினை கேட்டிருந்தால் ராஜிவ் வரலாற்றில் நின்றிருப்பார். ஆனால் ஜெயா கும்பல் கேட்க விடவில்லை

பின்னாளில் சோனியா அதிமுகவின் ஆபத்தான முகத்தை உணர்ந்து கலைஞருடனே அரசியல் கூட்டணி வைத்திருந்தார்

ஆக கிட்டதட்ட 4 தலைமுறைகள், அதாவது 80 ஆண்டுகளாக இந்தியாவின் மிக பெரும் அரசியல் குடும்பத்தில் எல்லா தலைமுறைகளுடன் கரம் பிடித்து வருவது எவ்வளவு பெரும் விஷயம்

அந்த நேரு குடும்பத்தை ஆதரிப்பதும், எதிர்ப்பதுமாக அரசியல் செய்த தலைவன் இந்தியாவில் கலைஞரை தவிர யாருமில்லை