கலைஞர் சிகிச்சைபெறும் படம் : யார் நம்ப முடியும்??
கலைஞர் சிகிச்சைபெறும் படம் என சிலவற்றை வெளியிடுகின்றார்கள், நாங்கள் ஜெயா போல அல்ல என காட்டி கொள்ள வெளியிடுகின்றார்களாம்
ஆனால் அந்த படங்கள் பலத்த கேள்விகளை எழுப்புகின்றன, சிகிச்சை பெறும் மனிதனுக்கு பொறுத்தபடும் உபகரணமோ இல்லை குழாய்களோ எதுவுமே இல்லை, அவசர சிகிச்சை பெறுபவருகுரிய சூழலே இல்லை
காய்ச்சலிலும், இரத்த அழுத்தத்திலும், ஏன் இருதய துடிப்பு நின்று திரும்பும் மனிதனை இப்படி ஹாயாகவா படுக்க வைத்திருப்பார்கள்?
யார் நம்ப முடியும்??
ஆயினும் மருத்துவமனை அறிக்கைகள் விட்டுகொண்டிருப்பதாலும் குடியரசு தலைவர் முதல் பெரும் மக்கள் பிரதிநிதிகள் வந்து பார்த்து நலம் என்பதாலும் வேறு சர்ச்சைகள் இருக்க முடியாது
கலைஞரின் காவேரி புகைபடைத்தை பார்க்கும்பொழுது ஏன் ஜெயா தன் கடைசிகால படங்களை தவிர்த்தார் என்பது புரிகின்றது
பல விஷயங்கள் புரியவில்லை
வெங்கையா நாயுடு ஏன் இப்பக்கம் சுற்றிகொண்டிருக்க வேண்டும்? அவருக்கு வேறு வேலையே இல்லையா
ஜெயா சாகும்பொழுதும் இங்கும் கூடாரம் போட்ட அவர், இப்பொழுதும் கழுகு போல பறப்பது ஏன்?
மோடி ஏன் வந்து பார்க்கவில்லை, ஜெயாவிற்கும் அவர் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது
கனிமொழி தவிர எந்த முகங்களிலும் சோகமில்லை ராசாத்தி அம்மாள் உட்பட
படங்களையும், நடக்கும் காட்சிகளையும் கோர்த்து பார்த்தால் ஒன்றும் சரியாக படவில்லை
இதற்கு மேல் ஏதும் சொன்னால் நம்மை வதந்தி பரப்புவோர் பட்டியலில் சேர்ப்பார்கள் என்பதால் விட்டுவிடலாம்
ஆனால் பெரும் வதந்தி பரப்பிகொண்டிருப்பவர்கள் யார் என்றால் அது காட்சிகளை கவனிப்போருக்கே புரியும்
கலைஞருக்காக யாரும் பிரார்த்தனை, கோவிலில் வேண்டுதல், மொட்டை அடித்தல் போன்ற பகுத்தறிவிற்கு ஒவ்வாத செயல்களை செய்ய வேண்டாம் : வீரமணி
கலைஞர் பிழைக்க கூடாது என்பதில் வீரமணிக்கு அவ்வளவு ஆசையா?
இல்லை ஏதும் முன் கூட்டியே தெரிந்ததா?
பகுத்தறிவு தலைவனுக்கு , ஆத்திக வழியில் மொட்டை போட்டு, அலகு குத்தி வேண்டி கொள்ளலாம் என்பது இப்போதைய பகுத்தறிவு
இனி என்ன? திமுகவினை பாஜகவோடு இணைத்துவிட வேண்டியதுதான்
பிராமணன் அல்லாதவர் அர்ச்சகாரகிவிட்டார், பெரியார் கலைஞரின் நெஞ்சில் குத்திய முள் அகன்றது
ஆனால் அதே அர்ச்சகர் பூனூலும் அங்க வஸ்திரமும் நெற்றியில் விபூதியுமாக வந்து நிற்பது பெரியார், கலைஞர் தலையில் கல்லை தூக்கி போட்டாயிற்று