சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் : பிரதமர் மோடி
சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் – பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள்
சொல்லட்டுமா?
ஆள தெரியாமல் ஆண்டதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, சுதந்திரநாளில் மக்களுக்கு பாஜக அரசிடம் இருந்து சுதந்திரம் கொடுத்துவிடுவதாக அறிவித்து விடுங்கள்
எப்படி எல்லாம் இந்தியாவிற்கு டிமிக்கி கொடுப்பது என இங்கிலாந்து கடற்கரையில் மல்லாக்க படுத்து சிந்திக்கும் மல்லையாவிற்கு ஒரு யோசனை கிடைத்துவிட்டது
லண்டன் கோர்ட்டில் “அய்யன்மீர் நான் இந்தியா சென்றால் சிறையில் அடைப்பார்கள், ஆனால் அங்குள்ள சிறை காற்று புகாத, வெளிச்சம் இல்லா சிறை அங்கு அடைத்தால் செத்துவிடுவேன்” என புலம்பி இருக்கின்றார்
லண்டன் கோர்ட் “அப்படியா? இந்திய சிறை வீடியோவினை அனுப்புங்கள்” என இந்தியாவிடம் கேட்டுவிட்டது
என்ன செய்யலாம் இந்தியா?
சசிகலா இருக்கும் அறையினை படமெடுத்து அனுப்பினால் தீர்ந்தது விஷயம்
அசாம் மாநிலத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு சர்ச்சையால் நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு, ரத்தக்களறியாக மாறப்போகிறது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
இந்திய குடிமகக்ள் யார், வங்கத்திலும் பர்மாவிலும் இருந்தும் வந்தது யார் என்றும் கணக்கெடுத்தால் அதனால் ரத்த களறி ஆகுமா?
அம்மணியின் பயம் வங்கத்திலும் இது தொடர்ந்து அவரின் வோட்டு வங்கி பாதிக்கும் என்பதுதான்
இப்படி எல்லாம் தூண்டிவிட்டால் மம்தா பானர்ஜியினை பிடித்து உள்ளே போடுவது நாட்டிற்கு நல்லது