நாம் தமிழரை விட மோசமான மெண்டல்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள்
நாம் தமிழரை விட மோசமான மெண்டல்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள்
வெங்கய்ய நாயுடுவிற்கு இங்கென்ன வேலை? ஜெயாவின் கடைசி கால மர்மம் போல இங்கும் ஏதோ நடக்கின்றது என்பதெல்லாம் யாரும் அறியாததல்ல
கலைஞரை சந்திக்க நாள்தோறும் காவேரிக்கு அணிவகுப்பு நடப்பதும், பல அதே அப்பல்லோ காட்சிகள் நடப்பதும் யாருக்கு சந்தேகத்தை கொடுக்காது?
இதற்கு முன்னும் கலைஞர் பலமுறை மருத்துவமனை சென்றார், ராமசந்திரா முதல் பல இடங்களில் சிகிச்சை பெற்றார்
ஏன் இதே காவேரியில் கூட இருந்தார்
அப்பொழுதெல்லாம் மொத்தமாக இப்படி குழுமினார்களா? இல்லை நிச்சயம் இல்லை
பலத்த சலசலப்பு ஏற்பட்டதால் விஷயம் புகைகின்றது
அதற்குள் எம்மிடம் வந்து ஆளாளுக்கு சாடுகின்றார்கள், அதிலும் உள்பெட்டியில் கேட்கின்ற பல கேள்விகள் இவர்கள் மனிதர்களே அல்ல என்பதை சொல்கின்றது
நம்மிடம் வம்பிழுக்கும் திமுகவினர் எந்த ரகம் என பார்த்தால், தினமலர் கலைஞரை கலாய்த்ததை புரிந்து கொள்ளாமல் தினமலரை பாராட்டியவனாகவே இருக்கின்றான்
தினமலர் ஒரு வஞ்சகமான காமெடியினை செய்திருந்தது, விஷயம் புரிந்தோருக்கு அது கடும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது
அதாவது கலைஞரின் இதயம் 5 நிமிடம் நின்றுவிட்டு மறுபடி துடித்ததாக கடும் வெறுப்பினை நுட்பமாக கலாய்த்து சொல்லி இருந்தது
5 நிமிடம் ஒரு இதயம் நின்றுவிட்டால் உடல் என்னாகும் என்பதையும் அதன்பின் துடிக்க முடியுமா? துடித்தாலும் மூளை வேலை செய்யுமா என்பதையும் கூட தெரியா இப்பதர்கள் தினமலரை பாராட்டுகின்றன
சொல்லவந்ததை மிக நுட்பமாக கலாய்த்து சொல்லி இருந்தது தினமலர், அட்டகாசமான கலாய்ப்பு
அந்த தினமலரை “ம்ம்ம் அப்படி எம் தலைவன் வழிக்கு வா, அவன் பெருமையினை ஒப்புகொள்” என கொண்டாடிய கிறுக்கு திமுகவினர், எம்மிடம் சாடுகின்றார்களாம்
கலைஞர் உங்களுக்கு தலைவராக இருக்க வேண்டுமென்றால் உங்கள் மூளையினை கழற்றி வைத்து கொள்ளுங்கள்
என்னை ஏன் அப்படி செய்ய சொல்கின்றீர்கள்?
நாம் கண்ட சுவாரஸ்யமான தலைவர்களில் அவரும் ஒருவரே தவிர, வேறு ஒன்றுமில்லை
அதற்காக பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட தமிழினத்தில் கலைஞர் ஒருவரே நிரந்தர தலைவர் என நீங்கள் சொல்வதை கேட்டுகொள்ளவும் நான் தயாராக இல்லை
அந்த ஆலமரத்தை அண்டி பிழைக்கும் பல்லியாக நீங்கள் இருக்கலாம், அதற்காக வானில் சுற்றும் இப்பறவையினை எங்களை போல் இம்மரத்தடியில் இருந்து கலைஞர் புகழ் பாடிகொண்டே இரு என எப்படி சொல்ல முடியும்?
உங்களை போல மரத்தடி பல்லிகளாக இருந்து அதை ஆச்சரியமாக, அதை மட்டும் பார்த்துகொண்டிருக்க முடியாது, அப்படி இருந்தால் உங்களை போலவே மகா குறுகிய புத்தி வந்துவிடும்
மிக உயர இருந்து எல்லா விஷயங்களையும் கவனிப்பதில்தான் சுவாரஸ்யம் இருக்கின்றது
பிரியாணி யுவராஜ் மட்டுமல்ல, நீக்க வேண்டிய ஏராளமானோர் அங்குதான் இருக்கின்றனர்
போங்கடா டேய்….