ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த நாள்
அதுவரை ஐரோப்பாவில் ஒருவன் பேசியே ஆட்சிக்கு வந்ததில்லை, அந்த காலகட்டத்தில் அந்த ஜெர்மன் தேசம் அவனை நம்பியது, அவனை தவிர தங்களை காப்பாற்ற ஆளில்லை என மானசீகமாக நம்பியது
முதல் உலகப்போர் அவ்வளவு கொடூர நிகழ்வுகளை ஜெர்மனிக்கு கொடுத்திருந்தது.
பிரான்ஸ், பிரிட்டன் போல தாங்களும் குறிப்பிட்ட நாடு என சொல்லிகொண்ட ஜெர்மன் இன்னும் வளர ஆசைபட்டது
அது அப்பொழுது ஆட்டோமன் துருக்கியுடனும், ஆஸ்திரிய ஹங்கேரி எனும் அந்நாளைய வல்லரசுடனும் நல்ல தொடர்பில் இருந்தது
ஜெர்மனின் பெர்லினில் இருந்து பாக்தாத் வரை ரயில் விடும் திட்டம் அவர்களிடம் இருந்தது, அப்படி செய்திருந்தால் ஜெர்மன் பொருளாதார வல்லரசாகியிருக்கும்
விடுமா பிரிட்டன்
வஞ்சகமாக ஆடியது, போர் தொடங்க வேண்டும் என முடிவெடுத்து வாய்பிற்காய் காத்திருந்தது, ஜெர்மன் மட்டுமல்ல பல ராஜ்யங்கள் அதன் குறியில் இருந்தன
சிறிதாக தொடங்கிய போர் பெரும் போராய் வெடித்தது, ஆட்டோமான் சாம்ராஜ்யம் எனும் 500 ஆண்டுகால சாம்ராஜ்யம் சரிக்கபட்டது
ஆஸ்திரிய ஹங்கேரி நொறுக்கபட்டது, ஜெர்மன் கோழிகுஞ்சை போல் நசுக்கபட்டது
ஜெர்மனை பாஞ்சாலி துரியோதனன் சபையில் பாண்டவர்கள் போல் நிறுத்தினார்கள் அதை ஆளாளுக்கு பரிகசித்தார்கள், தீரா கடனை அதன் தலையில் கட்டினார்கள்
ஜெர்மானியர்கள் மனதில் புழுங்கினார்கள் அழுதார்கள்
ஒரே ஒரு ராணுவ வீரன் இதனை எல்லாம் மனதில் வைத்திருந்தான், அவன் பிறப்பால் ஆஸ்திரியன் ஆனால் ஜெர்மன் இனம்
இன்றுபட்ட அவமானத்திற்காக ஒரு நாள் ஜெர்மனியினை உயர்த்திகாட்டுவேன் என மனதிற்குள் சொல்லிகொண்டிருந்தான்
அவன் அன்று ஆயுதம் ஏந்தவில்லை, குண்டு வீசவில்லை
மாறாக பேசினான், பேச்சென்றால் அப்படி ஒரு பேச்சு
அதை நம்பிய ஜெர்மனி அவனே அந்த அவமான அடிமைதனத்தில் இருந்து அவன் ஜெர்மனை காப்பான் என நம்பிற்று
அவனிடம் ஆட்சியினை ஒப்படைத்த நாள் இன்று
ஐரோப்பாவின் மாபெரும் பரபரப்பான காலமும், உலகம் மிரண்ட காலமும் யூதர்களின் கருப்பு நாட்களும் இந்த நாளில்தான் தொடங்கின
ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த நாள்