ஊழலுக்கு தண்டனை கிடைத்ததோ இல்லையோ ஊழலின் வடிவமாவது வெளிவரும்
இந்த சிலைதங்கம் கொள்ளையடிக்கபட்ட மோசடி வழக்கில் கவிதா என்பவரை கைது செய்தபின் பல வகையான குரல்கள் எல்லாம் வருகின்றன இது ஆச்சரியமானது
இவர்கள் என்ன சொல்லவருகின்றார்கள் என்றால் கவிதா குற்றமற்றவர், இது மோசடி வழக்கு
அவர் மீது குற்றம் சாட்டபட்டிருக்கின்றது, அவர் நிரபராதியா இல்லையா என முடிவு செய்யவேண்டியது நீதிமன்றம் இவர்கள் அல்ல
ஆளாளுக்கு அவர் அப்பாவி என்கின்றார்கள், சில பத்திரிகைகள் வரிந்து கட்டி வருகின்றன
இதுவரை மூச் காட்டாமல் இருந்த வீரமணி திடீரென குதித்து இது பிராமணர்கள் ஆலயத்தை கைபற்ற செய்யும் சூழ்ச்சி என தன் வழக்கமான காமெடியினை கொட்டுகின்றார்
எந்த சூழலிலும் சிரிக்க வைக்கும் சக்தி அவருக்கு உண்டு என நம்ப வேண்டுமாம், நம்புவோம்
தமிழகம் ஒன்றும் ஊழலும் மோசடியும் நடக்காத மாநிலம் அல்ல, 50 வருடமாக மகா மோசமாக அது ஒன்றுதான் நடக்கின்றது
ஊழலுக்கு தண்டனை கிடைத்ததோ இல்லையோ ஊழலின் வடிவமாவது வெளிவரும்
ஆனால் இந்த ஆலய சிலை மோசடிகளில் அந்த வாய்ப்பும் வந்துவிட கூடாது என ஆளாளுக்கு வந்து நிற்கின்றார்கள்
50 ஆண்டுகாலமாக இத்துறை மாநில அரசின் கட்டுபாட்டில் இருப்பதாலும், திராவிட புரட்சியில் பிராமணர்கள் ஒடுக்கபட்டிருப்பதாலும் இது ஆரிய மோசடி என சொல்லமுடியாது
இந்த குற்றத்தை இழைத்தவர்கள் இங்குள்ளவர்களே, அதிகாரத்தில் இருந்தவர்களே அதில் மாற்றுகருத்தில்லை
சம்பந்தமே இல்லாமல் இது ஆரிய சூழ்ச்சி என்பது எல்லாம் சிரிப்பூட்டும் ரகம், பிராமணர் கையில் இருந்தபொழுது சிலை திருட்டெல்லாம் நடக்கவில்லை, பழனி கோவில் முதல் எல்லா சிலைகளும் பாதுகாப்பாகவே இருந்தன
இவர்கள் பொங்குவதை கண்டால் பெரும் மோசடி நடந்திருப்பது புரிகின்றது, அச்சம் வராமல் இந்த அலறல் வராது
இந்த வீரமணி என்றெல்லாம் வாய்திறக்கின்றாரோ அதெல்லாம் ஆளும்கட்சிக்கு சாதமான விஷயங்களாகவே இருகும் என்பதால் அதுவும் கவனிக்கதக்கது
அவர் சிபிஐ விசாரணையினை வரவேற்கின்றார் என்பது அந்த விசாரணை ஒன்றுக்கும் உதவாது என அவர் மகிழ்கின்றார் என்பதாகும்
ராமஜெயம் கொலைவழக்கு சிபிஐக்கு மாறியபின் என்ன ஆனது என தெரியும்
இப்பொழுதெல்லாம் சிபிஐ என்பது வழக்கை ஊற்றிமூடும் விஷயங்கள் , இதுவும் அதை நோக்கித்தான் செல்கின்றது இதனால் வீரமணி மகிழ்கின்றார்
ஆலயம் என்றால் ஆரிய சூழ்ச்சி என துடிப்பவரிடம் பெரியார் சொத்துக்களின் நிலை என்ன? வருமானம் என்ன? என கேட்டால் அவனும் ஆரிய அடிவருடி ஆகிவிடுவான்
கோவில் சொத்தை திருடிய எவனும் வாழமுடியாது, தெய்வங்கள் கண் திறந்தால் தாங்க முடியாது
இப்பொழுது தமிழக தெய்வங்கள் கண் திறந்துவிட்டன, இதுகாலம் நடந்த மோசடிகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன
அதனை பொறுக்கமுடியாமல் கவிதா நிரபராதி என ஒப்பாரி வைக்கின்றார்கள், யார் சொன்னார் என்றால் கவிதாவே சொன்னாராம்
ஒன்றும் அவசரமில்லை வழக்கு நடக்கட்டும், நீதிமன்றம் அதன் கடமையினை செய்யட்டும்
தொடர்ந்து கைதுகள் நடக்கும்படி காவல்துறையின் கரங்கள் சுதந்திரமாக்கபடட்டும்
எனக்கென்னவோ இதனை மத்திய அரசு சிறப்பாக விசாரிக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது
காரணம் ராஜிவ் கொலைவழக்கினை மாநில அரசு விசாரித்திருந்தால் அவர் தடுக்கிவிழுந்து 17 பேர் மேல் விழுந்து செத்தார் என முடித்திருப்பார்கள்
சிறப்பு குழு என்பதால் உண்மை வெளிவந்தது
அப்படி ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கபடட்டும், ஆலயங்கள் முதலில் இப்போதிருக்கும் நிர்வாகங்களிலிருந்து மாற்றபட்டு புதிய துறை உருவாக்கபட்டு எஞ்சி இருப்பதாவது காக்கபடட்டும்
இல்லாவிட்டால் ஆலய அஸ்திவாரம் கூட மிஞ்சாது
இப்போதைக்கு கவிதாவிற்கு ஆதரவாக கொடிபிடிக்கும் இந்த நபர்களையும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்தால் சால சிறந்தது