புலிகளின் பொய்முகங்களை கிழித்துகொண்டே இருப்போம்
இந்த காத்தன்குடி கொலைகளை எழுதினாலும் எழுதினோம் ஈழத்திலிருந்து சில கண்டன குரல்கள்
முஸ்லீம்கள் துரோகிகள், பிரபாகரன் குலசாமி இந்திய படை கற்பழிப்புபடை என அதே புலம்பல்
அவர்களுக்கு நாம் சொன்னது ஒன்றுதான்
ஒன்றும் ஆம் வீரப்போர் புரிந்தோம், பெண்கள் இடுப்பில் குண்டு கட்டி மாவீரம் காட்டினோம் வீழ்ந்தோம் வீரலாறு பாடிகொண்டே இருங்கள் அப்படியே இந்தியா கெடுத்தது கலைஞர் கெடுத்தார் என சத்தம் போடாமல் இருங்கள்
மாறாக நாங்கள் போராடினோம் இந்தியா கெடுத்தது என சொல்லாமல் இருங்கள்
உங்கள் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போருக்கு உங்களை காக்கத்தான் என்நாடு தலையிட்டது
அதில் எம் ராணுவத்தை விரட்டி, எம் அருமை தலைவனை கொன்றது சாட்சாத் சிங்களன் அல்ல, உங்கள் புலிகளே
அதன் பின் நடந்த அனைத்து அழிவுகளுக்கும் அவர்களும் அவர்களை ஆதரித்த நீங்களும்தான் பொறுப்பு
வீணாக எம்மிடம் வந்து எம் வீரகாவியம் தெரியுமா என வம்பிழுக்க வேண்டாம், உங்கள் வீரகாவியம் உங்களோடே இருக்கட்டும்
அப்படிபட்ட வீராகாவியம் படைத்ததாக கருதும் நீங்கள், முள்ளிவாய்காலில் 2 லட்சம் பேர் செத்தோம் என கத்த தகுதி அற்றவர்கள்
நீங்கள் உலகம் சொன்னதை கேட்டிருந்தால் உலகமும் நீங்கள் சொல்வதை கேட்டிருக்கும், மாறாக நாங்கள் வெற்றிபெறும் பொழுதெல்லாம் உலகம் வேண்டாம், நாங்கள் அடிவாங்கும்பொழுது கண்டிப்பாக வரவேண்டும் என்பதெல்லாம் வன்னிக்காட்டு நீதி
இத்தோடு விட்டுவிடலாம்
ஆனால் சில ஈழதமிழர்கள் நல்ல விஷயங்களையும் சொன்னார்கள்
“அய்யா, பிரபாரன் நல்லவனோ கெட்டவனோ இறுதிவரை போராடினான், குடும்பத்தோடு செத்தான்
ஆனால் அவன் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் சைமன் என்றொரு பிராடு பயல் ஏமாற்றி கொண்டிருக்கின்றான், அவனை கண்டிப்பதாக சொல்லி புலிகளை திட்டாதீர்கள்..”
நல்லது
அதை நீங்கள் சென்னை வந்து சைமன் காதை திருகி செவிட்டில் அடித்து சொல்வீர்களா?? டிக்கெட் செலவெல்லாம் எம்முடையது என்றால் பதில் இல்லை
ஆக ஈழதமிழர்களே, சைமனையும் அவன் தும்பிகளையும் ஐரோபாவில் இருந்து புலம்பும் ஈனதமிழர்களையும் நிறுத்த சொல்லுங்கள்
நாம் நிறுத்துவோம்
அவர்கள் பொய்யாக சொல்லிகொண்டே இருக்குமட்டும் புலிகளின் பொய்முகங்களை கிழித்துகொண்டே இருப்போம்
பிரபாகரன் உங்களுக்கு கடவுளாக இருக்கலாம், எங்களை பொறுத்தவரை இந்தியாவிலே தங்கி இயக்கம் வளர்த்து இந்தியாவினால் பலமுறை காப்பாற்றபட்டும் இந்தியா மேலே பாய்ந்த துரோகி