தமிழகத்து காஸ்ட்ரோ, சேலத்து லெனின் பழனிச்சாமி வாழ்க
அரசு பள்ளிகள் எல்லாம் சாகபோகும் முதியவர் போல பரிதாப கோலத்தில் காட்சி அளிக்கின்றன, சில வெள்ளையன் காலத்து, நாயக்க மன்னர் காலத்து கட்டடம் போல அழிந்து கிடக்கின்றன
சில அரசு பள்ளிகள் புற்றுநோயாளி போல இன்றோ நாளையோ என இடிந்துவிழும் நிலையில் இருக்கின்றன
ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கோ மாளிகை வீடுகள் இரண்டிற்கும் மேல் பல மாடிகளுடன் பளிச்சிடுகின்றன
தனியார் பள்ளியோ மன்னார்குடி கும்பலின் சொத்து மதிப்பு போல் பிரகாசமாய் ஜொலிக்கின்றன, சில செட்டிநாடு அரண்மனைகளுக்கே சவால் விடுகின்றன
ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களோ வாடகை கொடுக்க கூட வழி இல்லா நிலையில் இருக்கின்றார்கள்
இருவருமே ஆசிரியர்கள், ஆனால் அரசு ஆசிரியர் செல்வத்தில் கொழிக்கவும் அரசு பள்ளிகள் உருமாறி நிற்பதும் எப்படி?
அதே உழைப்பினை கொடுத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தடுமாறுவது எப்படி?
தமிழகத்தில் காணப்படும் பெரும் முரண்பாடு இது
இதை கவனித்து இந்த வர்க்க வேறுபாட்டை ஒழிக்க களமிறங்கும் கர்ம வீரர், தமிழகத்து காஸ்ட்ரோ, சேலத்து லெனின் பழனிச்சாமி வாழ்க