1950, 60 அரசியலை ஆழ யோசியுங்கள்
காமராஜரை கலைஞர் ஒழித்தார், கலைஞர் காமராஜரை சரித்தார் என்றெல்லாம் புது கதையினை தும்பிகள் சொல்ல தொடங்கிவிட்டன
காமராஜர் அப்பழுக்கற்றவர் என்பதில் சந்தேகமில்லை, என்றாவது திமுக அவர் மேல் ஊழல் குற்றசாட்டோ இல்லை மாபெரும் பொய்களை சொன்னதா?
இல்லை, கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைத்தான் சொன்னார்களே அன்றி வேறல்ல
காமராஜர் வாழ்வென்ன? முதலிலே அவரிடம் முதல்வர் பொறுப்பினை காங்கிரசார் கொடுத்தார்களா? இல்லை.
நடந்தது என்ன?
காங்கிரசில் அன்றே கோஷ்டிபூசல் அதாவது சுதந்திரத்திற்கு முன்பே தமிழக காங்கிரஸ் கோஷ்டி தகறாறால் மோதிகொண்டது, சத்தியமூர்த்தி ஒரு கோஷ்டி, ராஜாஜி தனி கோஷ்டி இதில் காமராஜர் சத்தியமூர்த்தி கோஷ்டி
ராஜாஜி முதல்வரான பொழுது வெளிநாட்டுபாணியில் அரை நாள் பள்ளிகூடம் அறிவித்தார், உலக நடப்பு அதுதான். நிச்சயம் அவர் அறிவாளி
ஆனால் குலகல்விதிட்டம் என திமுக பொங்க சிக்கல் பெரிதாயிற்று, ராஜாஜிக்கு நெருக்கடி அதிகமாயிற்று. படித்த பிராமண கொழுப்பில் ராஜாஜி ஊறிகிடக்கின்றார் ,காங்கிரஸ் ஆரிய பார்ப்பன கட்சி என்ற பிம்பத்தை திமுக தூக்க்கி பிடித்தது
அன்றைய காங்கிரஸில் பண்ணையார்களும், தொழிலதிபர்களும் நிரம்ப இருந்தனர், பணக்கார கட்சி அது மறுக்க முடியாது, திமுக இதனை குத்தி காட்டியது
இதனால் சாமன்ய சூத்திரனை ஆட்சியில் அமர்த்தும் கட்டாயம் காங்கிரசுக்கு வந்தது, காமராஜரை முதல்வராக்கினார்கள்
தாழ்த்தபட்ட சாதியிலிருந்து வந்த காமராஜர் முதல்வரானது இப்படித்தான், திமுகவும் அதன் போராட்டமும் இல்லை என்றால் காமராஜர் முதல்வராகி இருக்க முடியாது
தொடக்ககால காமராஜர் ஆட்சியினை பெரியார் பாராட்டினார், அண்ணா வரவேற்றார், திமுக நல்லா அரசியலே செய்தது, தமிழக உரிமைகளை காக்கும் காமராஜரை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என சொல்லிகொண்டது
சீனபோரை தொடர்ந்து தனிநாடு கோஷத்தை கைவிட்ட அண்ணாவின் பேரில் காமராஜருக்கு மரியாதை கூடிற்று
சிக்கல் நேரு இறந்ததில் தொடங்கிற்று, டெல்லியில் காங்கிரஸில் பனிப்போர் தொடங்கிற்று, காமராஜர் அதில் சிக்கினார், இங்கு முதல்வர் பதவி பக்தவச்சலம் வசம் சென்றது
இதனிடையே திமுகவில் இருந்து பிரிந்த சம்பத்தை காமராஜர் சேர்த்துகொள்ளவும் இன்னும் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக பெரும் பணக்கார பண்ணையார்களை காங்கிரஸ் நிறுத்தியதும் அரசியல் விளையாட்டுக்கள்
இந்நிலையில் காங்கிரஸில் இந்திரா கை ஓங்கியதும் காமராஜர் புறக்கணிக்கபட்டார், அவருக்கு எதிராக காங்கிரசாரே வேலை செய்தனர்
சம்பத் எனும் மாபெரும் சக்தி காங்கிரஸில் இணைந்த பின் கடலில் கரைந்த பெருங்காயம் போல ஆனதும் இன்னொரு சோகம்
1967ல் திமுக வெல்லும் என யாரும் நினைக்கவில்லை, ராஜாஜியே கூட்டணி பலத்தில் நாம் சில இடங்களை பிடித்து
திமுகவினை ஆட்டலாம் என்றே கூட்டணி வைத்திருந்தார்
ராஜாஜி முன்னாள் காங்கிரஸ்காரர்
இதுபோக அரிசிபஞ்சம் ,இந்திஎதிர்ப்பினை எல்லாம் பக்தவச்சலம் சரியாக கையாள தெரியாமல் தவித்தார், திமுக அதை வாய்ப்பாக்கிற்று
இதெல்லாம் சேர்ந்துதான் காமராஜரை தோற்கடித்தன, சுருக்கமாக சொன்னால் தான் செய்த தவறாலும் காங்கிரஸின் கோஷ்டி பூசலாலும் இன்னபிற காங்கிரஸ் தவறாலுமே அவர் வீழ்ந்தார்
காங்கிரஸை தோற்கடித்தது காங்கிரஸே அன்றி திமுக அல்ல
அதன் பின்னும் காமராஜருக்கு வாய்ப்பு இருந்தது, அதிமுகவில் இருந்து பிரிந்த ராமசந்திரனை இயக்கிய சக்தி அவரை காமராஜரிடம் சேரவே நிர்பந்தித்தது, அவரும் காமராஜர் கதவினை தட்டினார்
“நடிகனை நம்பி நான் கட்சி நடத்தமாட்டேன்” என தன் மரியாதையில் உயர்ந்து நின்றார் காமராஜர், விளைவு காமராஜர் இந்திரா மோதல் முற்றிற்று
அப்படியும் திண்டுக்கல் இடைதேர்தலில் காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடித்து திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்க தவறவில்லை
அதன் பின் இந்திராவின் அடாவடியால் காங்கிரஸ் உடைய மனம் நொந்தார் காமராஜர் அவரின் தீவிர அரசியல் குறைந்தது
ஆம் காங்கிரசின் பலம் காங்கிரசாலே குறைக்கபட்டது
இதில் மிசாவும் வர மனம் நொந்தார், மிசாவினை எதிர்த்த சோ ராமசாமியும் கலைஞரும் காமராஜரிடமே வந்தனர், அதில் கலைஞர் ஆட்சியினை துறந்துவிட்டு காமராஜர் பின்னால் போராட வருவதாக பகிரங்கமாக வேண்டினார்
இதெல்லாம் யாரும் பேசமாட்டார்கள்
ஆனால் திமுகவின் போர்குணத்தை இந்தி எதிர்ப்பிலே கண்ட காமராஜர், இந்திராவின் அடக்குமுறையின் கொடூரத்தை எண்ணிபார்த்து தமிழகத்தில் பெரும் உயிர்பலி ஏற்படும் என அஞ்சினார்
அது உண்மையும் கூட எமர்ஜென்சி காலத்தில் சஞ்சய் காந்தியின் ஆட்டம் இன்றும் கரும்புள்ளி
மிசா காலம் காமராஜரின் மனதை பாதிக்க அப்படியே இறந்தார் காமராஜர், ஓடோடி வந்த கலைஞர் பெரும் மரியாதையுடன் அவரை தகணம் செய்ய முன் நின்றார்
இங்கு காமராஜருக்கு செய்ய வேண்டிய நினைவுகளை காங்கிரஸ்காரர்களை விட கலைஞரே செய்தார், மறுக்க முடியாது
சிந்தாந்த வேறுபாட்டில் காங்கிரஸில் இருந்ததால் அவர் காமராஜரை எதிர்த்து அரசியல் செய்தாரே தவிர காமராஜர் மேல் அவருக்கான மரியாதை அப்படியே இருந்தது
அவர் அப்படி சொன்னார், இப்படி சொன்னார் என்பார்கள், சரி ஆதாரம் கொடுங்கள் என்றால் அவர்களிடம் இருக்காது
காமராஜர் வியாபார குடும்பம் என கலைஞர் சொன்னது காமராஜர் தாய் கருவாடு விற்றவள் என திருத்தபட்டு வெளிவந்தது
இப்படி அவர் சொல்லாததை எல்லாம் சொல்லி கலைஞரை தமிழகம் வெறுக்க வைப்பதில் பலருக்கு சந்தோஷம்
இதோ இப்பொழுது கொஞ்சமும் அறிவே இல்லாமல் ஈழம் கொன்றவர் கலைஞர் என சொல்லி திரிகின்றார்கள் அல்லவா? அப்படி
இதே கொடுமைதான் அக்காலமும் நடந்தது
ஒன்றுமட்டும் இந்த கோஷ்டிகளுக்கு மறுபடியும் சொல்லிகொள்கின்றோம்
அன்றைய காங்கிரஸ் பணக்காரர்கள் நிரம்பிய கட்சி,பிராமண அதிகாரம் ஓங்கிய கட்சி, காமராஜரை எல்லாம் உயர் இடத்திற்கு கொண்டுவர அவர்கள் விரும்பவில்லை
ராஜாஜியே அமரவைக்கபட்டார், அவர் படித்தவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் என ஏக பெருமையோடு அமர வைத்தார்கள்
பாட்டாளிகளும் ஏழைகளும் நிரம்பிய அன்றைய திமுக ராஜாஜிக்கு எதிராக செய்த கலகமே காமராஜர் எனும் சாமான்யன் முதல்வராக முடிந்தது
இல்லாவிட்டால் சாகும்வரை ராஜாஜிதான் முதல்வர்
ஆனால் பெரும் ஞானி ராஜாஜி ஆட்சி சிறந்ததா? இல்லை காமராஜர் ஆட்சி சிறந்ததா என்றால் சாட்சாத் காமராஜர் ஆட்சி என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
அந்த ஆட்சி வர காரணமே திமுக
அதன் பின்னும் காமராஜர் உட்கட்சி விவகாரங்களாலும் பக்தவத்சலத்திடம் ஆட்சி சென்றதாலுமே வீழ்த்தபட்டார்
சுருக்கமாக சொன்னால் காமராஜர் பீஷமர், அவர் களத்தில் தன் பலத்தில் நிற்கும் வரை அவரை வீழ்த்தமுடியாது
ஆனால் கவுரவர்களின் உட்கட்சி பூசலும், கண்ணனின் தந்திரமும் எப்படி பீஷ்மரை வீழ்த்தியதோ அப்படி வீழ்த்தபட்டார்
காமராஜரை ஏன் பீஷ்மர் என்கின்றோம் என்றால் மண்ணாசை என்பது இருவருக்குமே இல்லை, இதனால்தான் சசாகும்பொழுதும் மண்ணில் சாயாமல் அம்புபடுக்கையில் கிடந்தார் பீஷ்மர்
காமராஜர் சமாதி கூட இல்லாமல் காற்றில் கரைந்துவிட்டார்
காமராஜருக்கு ஏன் சமாதி இல்லை அதில் காங்கிரசாரின் அலட்சியம் என்ன என்பதை எல்லாம் முன்பொரு பதிவிலே சொல்லியாயிற்று
காந்தி, நேரு, ராஜாஜி போன்றவருக்கு எல்லாம் இல்லா சமாதி காமரஜருக்கும் வேண்டாம் என்பதே காங்கிரஸ் நிலைப்பாடு
காமராஜர் எனும் சாமான்ய சூத்திரன் தமிழக அரசியலில் உச்சம் பெறவும், மங்கா முத்திரை இடவும் திமுக செய்த காரியங்கள் கொஞ்சமல்ல
1950, 60 அரசியலை ஆழ யோசியுங்கள் காமராஜர் மேலே வர திமுக எப்படி எல்லாம் மறைமுகமாக உதவியது என்பது தெரியும்