வாழ்க தலைவி, அவரால் மட்டும் வாழ்க தமிழக காங்கிரஸ்

Image may contain: 1 person, selfie and close-upடெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரே ஆலோசனை கூட்டமாக நடத்திகொண்டே இருக்கின்றது, கடும் ஆலோசனை செய்தது எப்படி என ஆலோசனை செய்வார்கள் போல‌

ஒரு முடிவும் அறிவித்தது போலவும் செய்தி இல்லை, ஆனால் கூட்டம் மட்டும் நடக்கின்றது

இது தேர்தலுக்கு தயாராகும் கூட்டம் என்பது யாருக்கு தெரியாது, ஆகட்டும்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு வெற்றிடம் இருக்கின்றது கிட்டதட்ட 1960க்கு முந்தைய நிலையினை தமிழகம் பெற்றுவிட்டது

திமுக தவிர குறிப்பிட்டு சொல்லும் வலுவான கட்சி இப்போது இல்லை, திமுகவிலும் அழகிரி தயாநதிமாறன் எல்லாம் முழிக்கும் முழி சரி அல்ல ஏதும் நடக்கலாம்

மற்றபடி பழனிச்சாமிக்கெல்லாம் அடுத்த தேர்தலில் நிற்கும் எண்ணம் இல்லவே இல்லை, ஏதோ ரோலர் ஹோஸ்டரில் சிக்கிகொண்டவர் போல் இருக்கின்றார், இனி இறக்கிவிட்டதும் அப்படியே எடுப்பார் ஓட்டம்

தினகரனுக்கு எல்லா தொகுதியும் ஆர்.கே நகர் ஆக முடியாது

கமலுக்கு அவர் அண்ணனே வோட்டு போடமாட்டார் என்பது வேறு விஷயம், ரஜினி அப்பொழுதும் சில படங்களை வைத்துகொண்டு இது முடியட்டும் அரசியலுக்கு வருகின்றேன் என சொல்லிகொண்டே இருப்பார் வரமாட்டார்

பாஜ ஆட்சிக்கு வர நிச்சயம் அக்கட்சியினரே ஒப்புகொள்ளமாட்டார்கள்

இந்நிலையில் காங்கிரஸ் தன் பழம் பொற்காலத்தை மீட்டெடுக்கலாம் ஆனால் பரிதாபம் திருநாவுக்கரசரை எல்லாம் வைத்து கொண்டு தடுமாறுகின்றது

எனினும் தலைவிக்கு தலைவர் பதவி கொடுக்காவிட்டாலோ இல்லை பாராளுமன்ற தேர்தலில் அவர் கேட்கும் தொகுதியினை கொடுக்காவிட்டாலோ மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்பதை சங்கம் தெரிவித்து கொள்கின்றது

தமிழ்நாட்டு அமைதியினை காக்கும் பொறுப்பு இப்பொழுது டெல்லி காங்கிரஸ் தலமைக்கே உள்ளது

அப்படி செய்ய தவறினால் இங்கு கடும் சவாலை காங்கிரஸ் சந்திக்கவேண்டி இருக்குமென சங்கம் எச்சரிக்கின்றது

வாழ்க தலைவி, அவரால் மட்டும் வாழ்க தமிழக காங்கிரஸ்